tag:blogger.com,1999:blog-904599446316539224.post4324388864270988408..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விவாதம் தொடர்ச்சிmdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-78791685180864624732011-10-21T23:56:33.450+05:302011-10-21T23:56:33.450+05:30ஒரு படைப்பு வாசகனால் வாசிக்கப்படும்பொழுது, அது அவன...ஒரு படைப்பு வாசகனால் வாசிக்கப்படும்பொழுது, அது அவனது விழிப்பு நிலையின் உச்சத்தில் படைப்பின் கருத்தை உள்வாங்கி தன் அகத்தோடும் புறத்தோடும் அனுபவிக்கும்பொழுதே அந்த படைப்பு வெற்றி பெறுகிறது. இதையே ஜெயமோகன் தனது தளத்தில் பல இடங்களில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இது பாரதி கவிதைகளுக்கு பொருந்தும் போது ஏன் அவரை மகாகவி என்று போற்ற தயங்குகிறார் என தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-76725559746224060852011-10-21T18:22:47.482+05:302011-10-21T18:22:47.482+05:30பாரதியின் பக்தி கவிதைகளை தவிர தேச விடுதலைக்கான கவி...பாரதியின் பக்தி கவிதைகளை தவிர தேச விடுதலைக்கான கவிதைகள் அனைத்தும் நீங்கள் சொல்வது போல சுதந்திர கால கட்டத்தில் அதை வாசித்தவர்களின் அகத்தோடு ஒன்றிய காரணத்தாலேயே <br />அவர்களால் தேச விடுதலைக்கு பங்களிப்பு செய்ய முடிந்தது. எத்தனை சாமானியர்கள் பாரதியின் கவிதைகளாலே சுதந்திர போராட்ட வீரர்களாக மாற்றபட்டார்கள் என்பதே அவர் மகாகவி என்பதற்கு போதுமானது. பாரதியின் சுதந்திரத்திற்கான கவிதைகள், அதை வாசிதவர்களின் ஆன்மாவினுடே ஊடுருவி அன்றைய சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகளை ஜெயமோகன் வசதியாக மறந்து விட்டு இன்றைய சூழலில் அக்கவிதைகளுக்கு விமர்சன அளவுகோல் வைப்பதே தவறு. பாரதியின் படைப்புகளையே பக்தி, சுதந்திரம், வசனகவிதை என்று பகுப்பது போல ஜெயமோகனின் முதலில் எழுதிய காலம் முதல் இன்று வரை அவர் எழுதிய படைப்புகளை காலசூலழுக்கு ஏற்ப பகுத்தால் அவரது விமர்சன அளவுகோலே அவரது படைப்புகளை விவாதத்திற்கு கொண்டு வந்து விடும். ஒட்டு மொத்த படைப்புகளை கொண்டே ஜெயமோகன் இலக்கியவாதி என அறியப்படும்போது பாரதியின் கவிதைகளை பாகுபாடு செய்து அவரை மகாகவி அல்ல என்று புறந்தள்ளுவது அநாகரீகம். நியாயமாக பாரதியின் கவிதைகளை மாதிரியாக வைத்தே மற்ற படைப்பு கவிதைகளை விவாதிக்க வேண்டும். எலியட்டின் படைப்புகள் எப்படி இங்கே இலக்கியமாக அறியபடுகிறதோ, அதுபோல மகாகவி படைப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு மேற்கத்திய சூழலில் திரு ஜெயமோகன் விமர்சன அளவுகோள்களால் விவாதிக்கப்பட்டால் கூட மேலை நாட்டு இலக்கியவாதிகள் கூட நமது பாரதிக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு கொடுப்பதற்கான வாய்ப்புண்டு .<br /><br />நாஞ்சில் கவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-43476349575106668822011-10-21T18:19:46.123+05:302011-10-21T18:19:46.123+05:30பாரதியின் பக்தி கவிதைகளை தவிர தேச விடுதலைக்கான கவி...பாரதியின் பக்தி கவிதைகளை தவிர தேச விடுதலைக்கான கவிதைகள் அனைத்தும் நீங்கள் சொல்வது போல சுதந்திர கால கட்டத்தில் அதை வாசித்தவர்களின் அகத்தோடு ஒன்றிய காரணத்தாலேயே <br />அவர்களால் தேச விடுதலைக்கு பங்களிப்பு செய்ய முடிந்தது. எத்தனை சாமானியர்கள் பாரதியின் கவிதைகளாலே சுதந்திர போராட்ட வீரர்களாக மாற்றபட்டார்கள் என்பதே அவர் மகாகவி என்பதற்கு போதுமானது. பாரதியின் சுதந்திரத்திற்கான கவிதைகள், அதை வாசிதவர்களின் ஆன்மாவினுடே ஊடுருவி அன்றைய சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகளை ஜெயமோகன் வசதியாக மறந்து விட்டு இன்றைய சூழலில் அக்கவிதைகளுக்கு விமர்சன அளவுகோல் வைப்பதே தவறு. பாரதியின் படைப்புகளையே பக்தி, சுதந்திரம், வசனகவிதை என்று பகுப்பது போல ஜெயமோகனின் முதலில் எழுதிய காலம் முதல் இன்று வரை அவர் எழுதிய படைப்புகளை காலசூலழுக்கு ஏற்ப பகுத்தால் அவரது விமர்சன அளவுகோலே அவரது படைப்புகளை விவாதத்திற்கு கொண்டு வந்து விடும். ஒட்டு மொத்த படைப்புகளை கொண்டே ஜெயமோகன் இலக்கியவாதி என அறியப்படும்போது பாரதியின் கவிதைகளை பாகுபாடு செய்து அவரை மகாகவி அல்ல என்று புறந்தள்ளுவது அநாகரீகம். நியாயமாக பாரதியின் கவிதைகளை மாதிரியாக வைத்தே மற்ற படைப்பு கவிதைகளை விவாதிக்க வேண்டும். எலியட்டின் படைப்புகள் எப்படி இங்கே இலக்கியமாக அறியபடுகிறதோ, அதுபோல மகாகவி படைப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு மேற்கத்திய சூழலில் திரு ஜெயமோகன் விமர்சன அளவுகோள்களால் விவாதிக்கப்பட்டால் கூட மேலை நாட்டு இலக்கியவாதிகள் கூட நமது பாரதிக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு கொடுப்பதற்கான வாய்ப்புண்டு .Anonymousnoreply@blogger.com