Pages

Saturday, November 12, 2011

ரேழியில் ஒரு பாவை




தமிழ்நாட்டு தோல் பாவை 'பாடகி'



ரேழியில் ஒரு
பாவை பாடியது

குடமே
பனிக்குடமே
நற்குடமே
பொற்குடமே

இலையே
சிற்றிலையே
(முதுகு நோவ)
இன்று முற்றும்
இருந்திளைத்த சிற்றிலையே*

குயிலே
சிறுங் குயிலே
கருங் குயிலே
கூவுமென் கருங்குயிலே

சங்கே
நற்சங்கே
வெண் சங்கே
கோலப்பெருஞ் சங்கே

குடம் ஆறாகவே
இலை காடாகவே
குயில் வான் ஆகவே
சங்கு கடலாகவே

கொங்கைக்
குங்குமம்
தான் அழியவே

அருள்வாய்
தருவாய்
நிறைவாய்




--------------------------------------
* ஆண்டாள்

4 comments:

  1. புன்னகைக்க வைத்தது :)

    ReplyDelete
  2. Beautiful !! real fun to just read it.

    ReplyDelete
  3. choodagam
    tholvalai
    thodu
    sedvippoo
    padagam

    perum parai
    kola vilakku
    kodi
    vidhanam

    ukkam
    thattoli

    kaanam serndhu
    koodi irundhu
    kulindhaval polum.... :)

    ReplyDelete
  4. சூடகம்
    தோள் வளை
    தோடு
    செவிப்பூ
    பாடகம்

    சங்கம்
    பெரும் பறை
    கோல விளக்கு
    கொடி
    விதானம்
    உக்கம்
    தட்டொளி

    கானம் சேர்ந்து
    கூடி இருந்து
    குளிர்ந்தவள் போலும் .... :)
    Balaji Srinivasan

    ReplyDelete