காற்றற்ற காலையில் கூரையில் தொங்கும் மழைத்துளி
புல்வெளியில் மேயும் வெள்ளைக் குதிரைகள்
தெருவில் தோழி
வானில் நாரைகள்
மாடத்தில் புறா
உதிரும் நாகலிங்கப் பூ
வெடித்த வேர் பலா
துள்ளி ஓடும் அணில்
தூரத்தில் சங்கொலி
யாரோ சப்பு கொட்டுகிறார்கள்
மேஜையிலிருந்து விழும் கரண்டி
சிதறும் கண்ணாடி
சீறும் பூனை
மூடாத புத்தகம்
முடியாத கவிதை
என்றும் பதினாறாய் தரையில் உன் உடல்
Beautiful and mystical- Raghav
ReplyDelete