tag:blogger.com,1999:blog-904599446316539224.post2943669712251015249..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: சில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” | சிறுகதை mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-1639046574147762012-12-26T18:30:30.072+05:302012-12-26T18:30:30.072+05:30பாடல் எண் : 9
அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்
...பாடல் எண் : 9<br /><br />அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்<br />கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த<br />சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்<br />இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா லிகழாரே.<br />பொழிப்புரை :<br /><br />பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?<br />குறிப்புரை :<br /><br />அயனும் மாலும் உம்மைக் காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப் புறப்படாதீர்; உம்மை யாவரும் இகழார்கள் என்கிறது. அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால். கரப்பு உள்ளி - இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி, ஏதிலர் - அயலார்.<br />பாடல் எண் : 10<br /><br />நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை<br />ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல்<br />பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்<br />சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.<br />பொழிப்புரை :<br /><br />நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.<br />குறிப்புரை :<br /><br />புத்தரும் சமணரும் உரைக்கும் சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த விரும்புபவர்களே! சிராப்பள்ளி சேர்மின் என்கின்றது. நாணாது - வெட்கப்படாமல். கஞ்சியை விடியலுணவாகவும், பகலிலும் உண்டு ஓதுபவர்கள் புத்தர்கள். பேணாது - போற்றாது. உறுசீர் - மிக்கபுகழ். சேணார் கோயில் - ஆகாயமளாவிய கோயில்.<br />பாடல் எண் : 11<br /><br />தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த<br />கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்<br />ஞானசம்பந்த னலமிகுபாட லிவைவல்லார்<br />வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.<br />பொழிப்புரை :<br /><br />தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.<br />குறிப்புரை :<br /><br />சிராப்பள்ளியானைத் துதித்த ஞானசம்பந்தன் பாடலிவை வல்லார் தேவரொடு சேர்ந்து வாழ்வர் என்கின்றது. தேன் - வண்டு. கானல் - கடற்கரைச் சோலை. வானசம்பந்தத்தவர் - வானுலகிற் சம்பந்தமுடைய தேவர்கள்.<br />mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-46262294361163246092012-12-26T18:29:40.974+05:302012-12-26T18:29:40.974+05:30தொடர்ச்சி:
பாடல் எண் : 6
வெய்யதண்சாரல் விரிநிறவே...தொடர்ச்சி:<br /><br />பாடல் எண் : 6<br /><br />வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது<br />செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்<br />தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்<br />ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.<br />பொழிப்புரை :<br /><br />எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.<br />குறிப்புரை :<br /><br />சிராப்பள்ளிமேவிய செல்வர் பெண்ணொரு பாக மாகுவர், ஆகாத நஞ்சை அருந்துவர், பிரம கபாலத்தில் பிச்சையும் எடுப்பர், இவர் செயல்கள் ஒன்றோடொன்று ஒத்திருந்தனவல்ல என்றபடி. வெய்ய - கொடிய; விரும்பத்தக்க என்றுமாம். வேங்கைப்பூ பொன்சேரும் சிராப்பள்ளி என்றது, வேங்கை மலர்கள் பொன்போன்ற நிறத்தனவாய் நிலத்தைச் சேரும் மலை என்க. ஐயம் - பிச்சை.<br />பாடல் எண் : 7<br /><br />வேயுயர்சாரற் கருவிரலூகம் விளையாடும்<br />சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்<br />பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்<br />தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.<br />பொழிப்புரை :<br /><br />கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.<br />குறிப்புரை :<br /><br />தாயுமானவர், பேயின் கையிலுள்ள கொள்ளியைக் கை விளக்காகக் கொண்டு ஆடுதல் திருவுளக் குறிப்பாயின் அது ஆகாது என்கின்றது. வேய் - மூங்கில். கருவிரலூகம் - கருங்குரங்கு. சேய் - தூரம். கைவிளக்கு - சிறியவிளக்கு.<br />பாடல் எண் : 8<br /><br />மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்<br />தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்<br />சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்<br />சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.<br />பொழிப்புரை :<br /><br />மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?<br />குறிப்புரை :<br /><br />தலையே கலனாகப் பலி ஏற்றுண்பார்; சொல்லவல்ல வேதத்தையும் பாடலையும் சொன்னால் சிராப்பள்ளியார் செய்கை சில அல்லாதன போலும் என்கின்றது. மல்கும் - நிறைந்த, வேதங்களையும் பாடல்களையும் சொன்னால் அவற்றில் சில அல்லாதன என்பதை அவர் செய்கைகளிலிருந்து அறிகிறோம் என்பது கருத்து.<br />mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-22195869246391359122012-12-26T18:19:58.494+05:302012-12-26T18:19:58.494+05:30முழுப்பாடலையும் உரையோடு தருவது இன்னும் சிறப்பானது ...முழுப்பாடலையும் உரையோடு தருவது இன்னும் சிறப்பானது (நன்றி: www.thevaaram.org) <br /><br /><br />திருச்சிராப்பள்ளி<br /><br />பாடல் எண் : 1<br /><br />நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே<br />றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்<br />சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்<br />குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.<br />பொழிப்புரை :<br /><br />நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.<br />குறிப்புரை :<br /><br />சிராப்பள்ளி நாதரைச் சொல்ல என்னுள்ளம் குளிரும் என்கின்றார். நன்றுடையான், தீயதில்லான் இவை யிரண்டும் இத்தலத்துத் தீர்த்தங்கள். நரைவெள்ளேறு - மிக வெள்ளிய இடபம். சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து அடையாத இயற்கையேயான திரு.<br />பாடல் எண் : 2<br /><br />கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்<br />செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி<br />வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ<br />பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.<br />பொழிப்புரை :<br /><br />சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?<br />குறிப்புரை :<br /><br />பெண் குரங்கு ஆண் குரங்கோடு ஊடி, குட்டியையும் தூக்கிக் கொண்டு மூங்கிலில் பாய்வதற்காக மலைமிசையேறும் சிராப்பள்ளி நாதா! நாகத்தையும் மதியையும் உடனாக வைத்தல் உனக்குப் பழியாகுமல்லவா?. கைம்மகவு - கைக்குழந்தை. கடுவன் - ஆண் குரங்கு. கழை - மூங்கில். செம்முக மந்தி - சிவந்த முகத்தோடு கூடிய பெண் குரங்கு. பெண் குரங்கின் முகம் சிவப்பாயிருக்குமென்ற குரங்கின் இயற்கையையும் ஈண்டு எண்ணுக. வெம்முக வேழம் - கொடுந்தன்மையுடையயானை.<br />பாடல் எண் : 3<br /><br />மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்<br />செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்<br />சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்<br />எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே.<br />பொழிப்புரை :<br /><br />மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.<br />குறிப்புரை :<br /><br />சிராப்பள்ளி நாதனின் அடியார்க்கு அல்லல் இல்லை என்கிறது. மந்தம் முழவம் - மந்தஸ்தாயியில் அடிக்கப்படும் முழவம். மழலை - பொருள் விளங்காத ஒலி.<br />பாடல் எண் : 4<br /><br />துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்<br />சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்<br />கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்<br />பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.<br />பொழிப்புரை :<br /><br />பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.<br />குறிப்புரை :<br /><br />நீலகண்டன், எரியாடுங் கடவுள், பிறைச் சென்னியன் எங்கள் கடவுள் என்கின்றது. வண்டும் தும்பியும் நீலப் பூவில் தங்கிப்பாடும் என்ற சுனையியற்கை முதல் இரண்டடிகளில் குறிக்கப் பெறுகிறது. கறை - விடம்.<br />பாடல் எண் : 5<br /><br />கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றும்<br />சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்<br />தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்<br />நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.<br />பொழிப்புரை :<br /><br />கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?<br />குறிப்புரை :<br /><br />சிவபெருமான் முழுமுதற் கடவுளல்லர் என்பார்க்கு உண்மை உணர்த்துவது இப்பாடல். கொலைவரையாத கொள்கையர் - கொலையை நீக்காத கொள்கையினை உடைய திரிபுராதிகள். நிலவரை நீலம் - நிலவுலகில் நீலநிறம் ஊட்டப்பட்ட துணி. வெள்ளை நிறம் ஆமே - வெண்மை நிறம் உடையதாதல் கூடுமா? நீலநிறத்துக்கு மட்டும் உரிய பண்பு இது. அதுபோல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றல் இயலாது. (பழமொழி - 168.)<br />mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-6436589660814165572012-12-26T18:12:21.700+05:302012-12-26T18:12:21.700+05:30மூலத்தை தானே பார்த்து அறிவது என்ற கொள்கை உடைய வாசக...மூலத்தை தானே பார்த்து அறிவது என்ற கொள்கை உடைய வாசகர்கள் வசதிக்காக கதையில் குறிக்கப்படும் சிராப்பள்ளி பதிகப் பாடல்கள் இதோ :-) (நன்றி : www.thevaaram.org)<br /><br />வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது<br />செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்<br />தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்<br />ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.<br /><br />நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை<br />ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல்<br />பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்<br />சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.Venkatesan Chakaravarthyhttps://www.blogger.com/profile/17883670819176794976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-58844706453719735422012-12-26T15:49:16.097+05:302012-12-26T15:49:16.097+05:30தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் பல வார்...தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் பல வார்த்தைகள் புரியவில்லை என வாசகர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பொருட்டு கீழ்க்கண்ட பட்டியலை வெளியிடுகிறேன்.<br /><br />சமக்காளம்- ஜமுக்காளம்<br />ஓத்து- உரைத் தொகுப்பு<br />புறனடைத் தகவல் - external information<br />உருசியன் - ருஷ்யன் <br />சப்பான் - ஜப்பான்<br />பாசை- பாஷை<br />மண்ணூறல் எடுவித்த நீர்- mineral water<br />ஊருலவுத் திருமேனி- உற்சவ மூர்த்தி<br />சிற்றுந்து- சிறிய உந்து , ஸ்கூட்டர் அல்லது பைக்<br />முன்னிகை- முன்னுரை<br />உத்திராக்கம்- ருத்ராட்சம்<br />குமுகாயம்- சமூகம்<br />உலத்தம்- உரை<br />சீன்சு- ஜீன்ஸ்<br />சீவாத்மா- ஜீவாத்மா<br />முவன்னா குவன்னா சாவன்னா- மு(த்துக்) கு(மார) சா(மி)<br />உயர் குதிகுளம்பு சப்பாத்து- High heel shoes<br />எக்கு- பார்வை, கோணம்<br />குழம்பி- காபி<br />குளகம்- தொடர்ச்சி<br />வைரசு- வைரஸ்<br />ஒரே குமுகாயத்தினர்- ஒரே சமுதாயத்தினர் அல்லது ஒரே சாதியினர்<br />இலக்கம்- எண்<br />சூக்குமம்- சூட்சுமம்<br /><br /><br />இந்தக் கதை தனித்தமிழை பகடி செய்யவில்லை. இந்தக் கதையினைச் சொல்லும் கதாபாத்திரம் தனித்தமிழை பாவிப்பவர். அவ்வளவுதான்.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-79491477665705834202012-12-26T12:37:21.283+05:302012-12-26T12:37:21.283+05:30"சைவ வைணவ சண்டை" என்ற திணை-துறை குறிப்பு..."சைவ வைணவ சண்டை" என்ற திணை-துறை குறிப்பு கண்டபின் ஒரு தெளிவு கிடைத்தது. மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். இன்னும் அதிகமாக ரசிக்க முடிந்தது. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு வருடம் ஒரு முறை மீனவர்கள் செய்யும் பூஜை பற்றிய துணுக்கு ஒன்றை முன்பொருமுறை படித்திருக்கிறேன் அதன் பின்புலம் உள்ள தொன்மம் இப்போதுதான் புரிகிறது. நன்றி. Venkatesan Chakaravarthyhttps://www.blogger.com/profile/17883670819176794976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-20527423056336173882012-12-26T08:18:52.967+05:302012-12-26T08:18:52.967+05:30ஆமாம் தவறாக எழுதியிருந்தேன் நீங்கள் சுட்டிக் காட்ட...ஆமாம் தவறாக எழுதியிருந்தேன் நீங்கள் சுட்டிக் காட்டியவுடன் திருத்திவிட்டேன். நன்றி. கதை தனித் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. சைவ வைணவ தகறாறுகளின் உள்ளடக்கத்தையும் பாணியையும் போலி செய்கிறது. எந்தெந்த வார்த்தைகளுக்கு பொருள் தெரியவில்லை என்று எழுதுங்கள் பதிலிடுகிறேன்.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-85619960466969258572012-12-26T07:08:02.964+05:302012-12-26T07:08:02.964+05:30// கோவிந்தசாமியின் நின்ற திருக்கோலம்
கோவிந்தசாமி ...// கோவிந்தசாமியின் நின்ற திருக்கோலம்<br /><br />கோவிந்தசாமி கிடந்த திருக்கோலம் அன்றோ?<br /><br />மற்றபடி, கதை மெல்லிய புன்னகையை வரவழைத்தாலும் இது எதை/யாரை பற்றிய பகடி என புரியவில்லை. இந்த கதைக்கு கோனார் நோட்ஸ் கிடைக்குமா? Venkatesan Chakaravarthyhttps://www.blogger.com/profile/17883670819176794976noreply@blogger.com