tag:blogger.com,1999:blog-904599446316539224.post4084854589775025788..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: தல யாத்திரை: ஶ்ரீவாஞ்சியம் mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-61030744068482095022013-03-31T09:14:27.692+05:302013-03-31T09:14:27.692+05:30திருவாஞ்சியம் பதிவு சூப்பர். அடுத்து திருக்கண்ணமங்...திருவாஞ்சியம் பதிவு சூப்பர். அடுத்து திருக்கண்ணமங்கை பதிவை எதிர்பாக்கிறேன். உங்கள் சார்பாக ஒரு டிரைலர்.<br /><br />திருநின்றவூர் பக்கமாக சென்ற திருமங்கை ஆழ்வார் இவ்வூர் பக்தவத்சல பெருமாளை பாடாமல் சென்று விடுகிறார். இதை அறிந்த பெருமாள், ஆழ்வாரை துரத்தி சென்று திருக்கடன்மல்லையில் மடக்குகிறார். ஆழ்வாரும் ஒரு பாசுரம் பாடி விடுகிறார்.<br /><br />"நின்றவூர் நித்திலத்தை தொத்தார் சோலை காண்டவத்தை கனலெரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தல சயனத்தே".<br /><br />ஒரு பாசுரம் பெற்ற வெற்றிக் களிப்போடு ஊர் திரும்பிய பெருமாளை பாராட்டாமல் "ஒரு பாசுரம் தானா" என தாயார் உசுப்பேத்தி விடுகிறார். மறுபடியும் கிளம்பிய பெருமாள், இம்முறை திருக்கண்ணமங்கையில் பிடிக்கிறார். திருமங்கை மன்னனும் பெரிய மனது வைத்து மேலும் ஒரு பாசுரம் பாடுகிறார்.<br /><br />"நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினை புனலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே".<br /><br />இப்படியாக கஷ்டப்பட்டு இரண்டு பாசுரம் பெற்று தனது கோவிலை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக்கி விட்டார் பக்தவத்சலர்.Venkatesan Chakaravarthyhttps://www.blogger.com/profile/17883670819176794976noreply@blogger.com