Pages

Thursday, September 9, 2010

வெண் சங்கு

பிறந்த
கடலின் ஆரவாரத்தையும்
விகாசித்த
உலகின் மந்திர நாதத்தையும்
எப்பொழுதும் பகரும்
வெண் சங்கு ஒன்றை பரிசளித்தாள் அவள்
அவனோ
வெண் சங்கின்
செவ்விதழ்களின் நீர்மை
பெருங்கடலின் அழைப்பெனவோ
எல்லையின்மையின் மெளனத்தில் கரைய
அரிய வாய்ப்பெனவோ
அறியாதவனாகவே
வெண் சங்கு போற்றுதும் வெண் சங்கு தூற்றுதும்
வெண் சங்கு தூற்றுதும் வெண் சங்கு போற்றுதும்
என வாளாவிருந்தான்

பெண்மையின் பரிசுகள் அனைத்தும்
இவ்வாறாகவே

No comments:

Post a Comment