அதைக் கூண்டிலடைத்ததிலிருந்து
அவள் கணவனின் குரலில்
இறைஞ்சுகிறது
மிளகாய்ப்பழம் தர மறுத்தபோது
அவளுடைய காதலனின் குரலில்
அவ்வபோது
கூப்பிடுகிறது
சிறிய சிணுக்குரி ஒன்றினால்
பட்டென்று அதன் தலையில் போட்டபோது
அவள் அம்மாவெனவே முனகியது
எல்லோரும் கிளியாகிவிட்டனர் என்ற
பிரமையிலிருந்தவளுக்கு
கூண்டைத் திறந்துவிட்டால்
தன் சுய குரலில் அது பேசுமென
அவளுக்குத் தெரிந்துதானிருந்தது.
அவள் கணவனின் குரலில்
இறைஞ்சுகிறது
மிளகாய்ப்பழம் தர மறுத்தபோது
அவளுடைய காதலனின் குரலில்
அவ்வபோது
கூப்பிடுகிறது
சிறிய சிணுக்குரி ஒன்றினால்
பட்டென்று அதன் தலையில் போட்டபோது
அவள் அம்மாவெனவே முனகியது
எல்லோரும் கிளியாகிவிட்டனர் என்ற
பிரமையிலிருந்தவளுக்கு
கூண்டைத் திறந்துவிட்டால்
தன் சுய குரலில் அது பேசுமென
அவளுக்குத் தெரிந்துதானிருந்தது.
nandri kili josiyakkararukku
ReplyDeleteRagam" Ramesh kumar