Pages

Saturday, August 13, 2011

அஞ்சலி









From http://50watts.com/#2068768/Harry-Clarke-s-Fairy-Tales














































தோழி கூறியது:
கூரையற்ற
தோட்டத்து குளியலறைத் தரையில்
ஜப்பானிய ஓவியமெனவே கிடந்தாள்
அவள் நிர்வாணத்தை மறைத்த கரும் பச்சை இலைகள்
உன் பெயரை எழுதியிருந்தன 
அவளுடைய பொன்னிறக் கூந்தல் தோட்டம் முழுக்க விரிந்திருந்தது
ஒரு கையில் அணைந்த சிகரெட்டும்
மறு கையில் உன் குரலில் பேசும் கிளியும்.
அவள் சுவாசிக்க வேண்டுமேயென்று பதைபதைத்து
இலைகளை அவள் முகத்திலிருந்து விலக்குகிறாய்
அவள் உதடுகளையும் மென் முலைகளையும் சருகுகள் குத்துமோ என்று கவலையுறுகிறாய்
அவளின் நிலைத்த கண்களில் உன் உருவைத் தேடுகிறாய்
மெதுவாக விசிலடித்தபடியே 
முட்டுக்களை கட்டிக்கொண்டு
அவள் எழுந்து உன் பெயரைச் சொல்லி அழைப்பாளென
காத்திருக்கிறாய்
கிளி தத்தி தத்தி ஏதோ உளறியபடி
தோட்டம் முழுக்க
அலைகிறது

No comments:

Post a Comment