Pages

Wednesday, August 17, 2011

வெண் புரவி


முன் தீர்மானங்கள் ஏதுமில்லை 
என் கவிதைக்குள் நுழைந்துவிட்ட அந்த வெண் புரவியை என்ன செய்வதென்று;
குளம்பொலியை கனவில் கேட்டு விழிப்பதற்கு முன்பே
என் வாசலில் வந்து நின்று விட்டது
ஷாம்பூ மணக்கும் பிடரி மயிரையும் வாலையும் 
சுழற்றிக்கொண்டு.
தாவி ஏறி 
நடை பழக்கி 
இனிய புன்முறுவலோடு
பிரளயம் தள்ளிப்போய்விட்டது
என அறிவிக்கலாமா
கொம்பொன்று சமைத்து
புதுப் புராணமெனலாமா
என்பதற்குள்
விறைக்கிறது அதன் குறி
கரும் புரவி கண்டு.

No comments:

Post a Comment