Pages

Friday, November 18, 2011

அந்தக் காலடிச் சத்தம்






பல நாட்களாக
ஒலிக்கிறது
அந்தக் காலடிச் சத்தம்

எதிர்பாராத
சமயங்களில்
தோள் தொட்டு
திருப்பும்
கை போல்
ஒலிக்கிறது
அந்தக் கால்

பிடித்து விடலாம்
என்று திரும்பினால்

கடந்து செல்லட்டும்
என்று நின்றால்

கேட்கவில்லை
என மறுத்தால்

கூட நடக்க
முயற்சி செய்தால்

ஒலிப்பதில்லை
அந்தக் காலடிச் சத்தம்

யாரோ காலற்றவளின் இசையென
கற்பிதம் கொள்ளும்போது

முத்தம் வேண்டி நிற்கும்
இதழ்களெனவே

அணைக்க துடித்து இருக்கும்
மார்பெனவே

சேர நினைக்கும்
பொற் பாதங்களெனவே




No comments:

Post a Comment