Pages

Wednesday, November 30, 2011

நீர் அளைதல்





குழந்தையின்
தளிர் விரல்கள் வீசிய
நீர்த் திவலைகள்
மார் தீண்ட
உயிர் கிளர்ந்து
வெளி நடக்க
அருளெனப் பொழிந்த
மழைத் தூறல்
உள் மன
போகமென
வெளி நிறைக்க
தடுத்தாட்கொள்ளும்
பொழிவாய்
ஆவேசமாய்
பெரிதாய்
பெய்யெனப் பெய்ய
இலக்கற்ற ஓடை
கலந்து சேறாய்
குழம்பி
செல் சேர்க்கையே
இடமென
அரண்டு புரண்ட
ஜலக்கிரீடை
மீனென நீயென வாவென
வாவாவென
நீருலகு நீந்த
நீந்த நீந்த
ஈர்த்த நீர்மை
நீர்த்த நீலம்
என்
நிறை கடலெனவே




No comments:

Post a Comment