Pages

Thursday, November 24, 2011

பொம்மைகள் வெறித்து நின்றுவிட்டன



சாந்த்தால் பழங்குடி மர பொம்மைகள்/பொம்மலாட்ட மேடையில் நிற்கும் புகைப்படம்



பொம்மைகள் வெறித்து நின்றுவிட்டன
வேறெதுவும் செய்வதிற்கில்லையெனவும்
குழந்தைகளுக்கு இனி ஏதுமில்லையெனவும்
அறிவிப்பு வெளியாகிவிட்டது

மரப்பொம்மைகள் என்பதினால்
மீண்டும் மரங்களாக்கலாம்
என்றொரு திட்டம்

எவரின் பிரதிமைகளோ இவையென
கூறி மூலங்களை உயிர்ப்பிக்கலாமென்பது
மறு திட்டம்

ஓரிரு நாள் அரசிகளாய் 
அரசுக்கட்டில் ஏற்றலாமேயென்பது
ஏகோபித்த திட்டம்

மர விறகாக்கி 
அடுப்பெரிக்கலாமென்பது
உடனடித் திட்டம்

புது பொம்மையாட்டியை
பயிற்றுவித்து
பொம்மைகளுக்கு 
அன்ன நடை பழக்கலாமென்பது
ஆனந்த திட்டமென்றால்
அன்னம் என்றொரு பறவையேயில்லையாம்
எல்லாமே பரட்டைத் தலை வாத்துதானாம்





No comments:

Post a Comment