Pages

Tuesday, January 3, 2012

சாரல் விருது 2012: வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும்



நண்பர்கள் ஜேடி-ஜெர்ரி நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் சார்பில் இந்த வருடம் சாரல் விருது வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். வண்ணநிலவனும் வண்ணதாசனும் நாம் மீண்டும் மீண்டும் பயிலவேண்டிய படைப்பாளிகள் ஆவர். திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன் என்று தொடர்ந்து வருடாவருடம் சிறந்த படைப்பாளிகளுக்கு சாரல் விருது போய்ச் சேர்வது இந்த விருதின் கௌரவத்தை அதிகப்படுத்துவதாக இருக்கிறது. வண்ணநிலவனையும் வண்ணதாசனையும் இணையத்தில் வாசிப்பதென்பதும் அபாரமானதாக இருக்கிறது.
வண்ணநிலவனின் தளம்: http://wannanilavan.wordpress.com
வண்ணதாசனின் தளம்:  http://vannathasan.wordpress.com

No comments:

Post a Comment