Pages

Friday, December 27, 2013

மரணப்படுக்கையில் இருக்கையில் நீ யாரெனக் கேட்டால் என் சொல்வாய்?



மரணப்படுக்கையில் இருக்கையில் 
நீ யாரெனக் கேட்டால்
என் சொல்வாய்?

ஒரு பிரார்த்தனையை
ஒலிக்கும் குரலே
முழு உடலின் அசைவாக

அந்தத் தாகம்
அந்தத் தாகத்தின் நினைவு
அந்த நினைவின் துரத்தல் 
அந்தத் துரத்தலில்
அழிபடும் மரணம்
என

கூடாமல் கலைந்த மேகம்
கானலில் மறைந்த கிணறு
கனவின் தீரத்தில் ஓடிய நதி
அலையோசையற்று அடங்கிய கடல்

இருப்பினும் துளிர்க்கிறது
இலை நுனியில்
ஒற்றைத் துளி
என 

கண்ணாடியுள் ஐயோவென்று
கரைந்தோடிய பிம்பக்குவியலுள்
தப்பிப் பிழைத்த
பல 
வண்ணத்
தீற்றலென






No comments:

Post a Comment