Pages

Wednesday, January 22, 2014

நீலோத்பலம்


நீலோத்பலத்தினை 
புகைப்படமாக
ஓவியமாக
வார்த்தையாக
மட்டுமே தெரியுமெனக்கு
என்று ஆரம்பிக்கும் 
நவீன வியாதி அறிக்கை ஒன்று
விண்ணூஞ்சல் ஏறி
உன் விழிநுதல் நாடி 
வருகிறதே யசோதரா
என் செய்வாய் நீ
இந்நாளின்
வாசனை அறியா
சித்தார்த்தனை?
மோப்பத்தடத்தில் கடக்காதோ
இந்த
பித்துரு
பின்னொரு ஜென்மத்தில்
உன் முலைகளில்
முகம் புதைத்து

புத்தனாவதற்கு 

No comments:

Post a Comment