எனது நான்கு கவிதைத்தொகுதிகளில் “நீர் அளைதல்” எனது நனவிலியை மினிமலிசக் கவிதைகொண்டு எழுதிப் பார்ப்பதாக இருந்தது. “ஒரு படிமம் வெல்லும், ஒரு படிமம் கொல்லும்” நமது சமகாலத்தை அனாதைகளின் காலமாக உருவகித்தது. “ரோஜாமொக்குக் கவிதைகளில்” கடல் தன் பிரம்மாண்ட நீர்க்கண்களால் பார்த்திருக்க மனித அகம் இயற்கையின் பகுதியாக இயற்கையோடு கலந்தும் பிரிந்தும் இருப்பதைப் பேசியது. “பாதம் பற்றிய பூ” எனது அகத்தை நிலவெளிக்காட்சிகளில் வைத்து அறிகிறது. பாதம் பற்றிய பூ பற்றுதலாகவும் பற்றின்மையாகவும் இருக்கிறது.
“நீர் அளைதல்” நற்றிணைப் பதிப்பக வெளியீடு. மீதி மூன்று தொகுதிகளும் தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடுகள்.

No comments:
Post a Comment