Tuesday, November 15, 2011

தாந்திரிகம் குறித்து


Kuntuzangpo- பெண் ஆற்றலுடன் கூடிய புத்தர்


வஜ்ரயோகினி பதிவினைத் தொடர்ந்து வஜ்ராயான பௌத்தம், தாந்திரிகம், எதிர் கலாச்சாரம், பின் நவீனத்துவம் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி விளக்கம் வேண்டி ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இவற்றைப் பற்றி என் பார்வையையும் ஆய்வினையும் முன் வைப்பதற்கு முன் தமிழில் இப் பொருள்கள் பற்றி எழுதப்பட்டுள்ளவை என்ன என்று தேடிப் பார்த்ததில் கீற்று வலைத்தளத்தில் சின்னத்தம்பி என்பவரின் கட்டுரை ஒன்றும் சொல்வனம் இணையதளத்தில் மித்திலன் எழுதிய புத்தக விமர்சனம் ஒன்றும் கிடைத்தன. இந்த இரண்டு கட்டுரைகளோடும் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் என் பார்வையையும் ஆய்வினையும் முன் வைப்பதற்கான பின்புலத்தினையும் தகவல்களையும் இக்கட்டுரைகள் தருவதாக நினைக்கிறேன். அவற்றின் சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். இந்த கட்டுரை ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் ஆய்வினை முன்வைப்பதற்கு தியான முறைமைகள் பற்றிய அடிப்படை விளக்கக் கட்டுரைகள் முதலில் எழுதப்படவேண்டும். வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தேடி வருகிறேன். சரியான கட்டுரைகள் கிடைக்கவில்லையெனில் அவற்றை எழுதிய பின்னரே தாந்திரிகத்தை உரிய முறையில் விவாதிக்கமுடியும். இது தவிர என் ஆய்வு களப் பணி மூலம் சேகரித்த பழங்குடி மக்களின் வழிபாட்டு சடங்குகள் சார்ந்தது. இவை பற்றி பொதுத் தளத்தில் அதிகமான தகவல்களோ ஆய்வுகளோ இல்லையாதலால் அவற்றை ஒழுங்குபடுத்திக்கொள்வது முறையான புரிதலுக்கு இட்டுச் செல்லும். இவ்வகைக் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கும்போது எனக்கு வந்துள்ள கடிதங்களையும் வெளியிடுகிறேன். அதுவரை கடிதம் எழுதிய நண்பர்கள் காத்திருக்க வேண்டுகிறேன். பெண் ஆற்றலை முதன்மைப்படுத்தும் தாந்திரிக மரபுகளை விவாதிக்க பொதுத்தளத்திலுள்ள பெண் பிம்பங்களை நாம் அணுகும் முறையினையும் சேர்த்து பார்க்கும்போதே தாந்தரிகம் எவ்வகையான எதிர் கலாச்சார விழுமியங்களை தன் செயல்முறைகளில் கொண்டிருக்கிறது என்பதை லகுவாக விளக்கமுடியும். இந்த நோக்கத்தைக்கொண்டே நான் அசின், நமீதா ஆகிய பெண் பிம்பங்கள் குறித்து எழுதியது. அடுத்து தியான பிம்பமாகக் கொள்ளக்கூடிய பொது பெண் பிம்பம் எது என்றும் தேடி வருகிறேன். இப்போதைக்கு இந்தக் குறிப்புகள் போதுமானவை.

“தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்”- மித்திலனின் புத்தக விமர்சனம்:

http://solvanam.com/?p=17369


“தாந்திரிகத்தின் பருப்பொருள் சார்ந்த சூழல்”- நல்லதம்பியின் கட்டுரை
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13744:2011-03-23-06-46-26&catid=1286:2011&Itemid=544 


1 comment:

Anonymous said...

பெண் ஆற்றலை முதன்மைப்படுத்தி இந்திய மரபிலிருந்து நவீன சிந்தனை உருவாவதற்கான நல்ல சாத்தியங்கள் தெரிகின்றன. தொடர்ந்து வாசிக்க ஆவலாயிருக்கிறேன். பிரதிபா நடராஜன்