Friday, December 2, 2011

என் கவிதைத் தொகுதி- வெளியீடு


ஓவியம்: மாயமான் வேட்டை
["ஆழ்குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்"மாரீசன் பற்றி கம்பன்]

எம்.டி.முத்துக்குமாரசாமியின் கவிதைகள்- தொகுதி 1

என்னுடைய இந்தத் தளத்தில் வெளிவந்த கவிதைகளோடு வேறு பல கவிதைகளும் சேர்த்து நூற்றுச் சொச்சம் கவிதைகள் “‘நீர் அளைதல்’ எம்.டி.முத்துக்குமாரசாமியின் கவிதைகள் தொகுதி 1” என்ற தலைப்பில் மின் பதிப்பாக இதே தளத்தில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி வெளியாகும். ஓவியங்களும் உண்டு.  விருப்பமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட காலம் வரை இலவசமாகவும் அதன் பிறகு பதிவிறக்கம் செய்ய ஏதேனும் விலை கொடுக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யவிருக்கிறேன். In Design-இல் புத்தக வடிவமைப்பு செய்வது எனக்கே தெரியுமாதலால் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஓட்டி வடிவமைத்து வெளியிடுவேன். iPad, Kindle, Sony book reader ஆகிய சாதனங்களில் வாசிக்கக்கூடிய கோப்புகளாகவும் கவிதைத்தொகுதியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின் பதிப்பாக தொகுத்த பின் தொகுப்பிலுள்ள கவிதைகள் என்னுடைய பதிவுகளிலிருந்து நீக்கப்படும். கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து இதர படைப்புகளையும் இவ்வாறாகவே வெளியிடத் திட்டம்.

நான் தொகுதியாக்க நினைக்கும் கவிதைகள் இப்போது ஆங்கிலத்திலும், ஃபிரெஞ்சிலும் மொழிபெயர்ப்பாகிக்கொண்டிருக்கின்றன.

என்னுடைய ப்ளாக்கிற்கு நேற்றோடு ஒரு லட்சம் தாண்டி வாசகர்கள் வந்துள்ளனர் என்றும் பெரும்பாலும் கவிதைகளையே அவர்கள் படித்திருக்கின்றனர் என்றும் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

2 comments:

Anonymous said...

It is great to have the poems in one bundle, but the paid downloads? I am not sure. Most of the net users including me are freeloaders :(

தூரன் குணா said...

மகிழ்ச்சி...மின்தொகுதி என்பது- அச்சு, கவிதையின் மீது செலுத்தும் அதிகாரம்*மயக்கங்களை கை(விடும்)மீறும் திறனுள்ள் மனங்கள் முன்னெடுக்கவேண்டியது தான்.மின் தொகுப்பாக வந்த பின் கவிதைகளை பதிவிலிருந்து நீக்கவேண்டியதின் தேவை என்ன என்பது புரியவில்லை.கவிதையை விட மதிப்பு மிகுந்ததாய் தோன்றும் எல்லாமே இங்கே இலவசமாய் கிடைக்கும் போது அது தற்கணத்தின் மீதான சரியான பரிசீலனையாய் தோன்றவில்லை.ஆயினும் வாழ்த்துகள்!!!