Saturday, October 16, 2010

ஆவேசம் ஒன்று

பொய்மொழியின்
நுண்ணிழைகளினால்
ஆன நெசவு
பெயரிடாத விலங்கின் நரம்புகளாய்
என் நாளங்களில் இணைய
கண்கள் செருகி
உடல் முறுக்கி
ஊளையொன்று
புறப்பட்டது
அந்தகாரத்திலிருந்து

ஓநாயின் உருவம் பெற்ற
அந்த ஊளை
தேடி தேடிக்
கிழித்தது உன்
செவிப்பறைகளை

சிவந்த என் கண்கள் மின்ன
நீண்ட என் நாக்கு
உன் செவிப்பறைக் குருதியை நக்க
உன் வன்மம் இனி அறியாது
என் நுண் இசையை
என்றவாறே
மேலும் பயணிக்கிறது
என் ஊளை

No comments: