Tuesday, October 26, 2010

புறாவோடு பேசியது குறித்த அரைகுறை அடிக்குறிப்புகள்

சக்தி பீடங்கள் இருக்குமிடமெல்லாம்
புறாக்கள் கூடுமென்று உனக்குத் தெரிந்திருக்கும்
தெரிந்தே இருக்கவேண்டும்
என்றாலும்
தனியே ஒதுங்கி துளசிச் செடிக்கடியில்
பம்மியது எப்படி
இளம் முலைக்கு சிறகு முளைத்தது போல
படபடத்து நிற்கிறாயே 
அவளிதயத் துடிப்பையும் 
காயம்பட்டாலும்
சிறகொடிந்தாலும்
பறந்துதான் தீரவேண்டும்
கூட்டம் கைவிட்டுவிடும் இல்லையெங்கில்
உன் சிறகின் நிழல் என் நிழலில் 
விழுந்தபோதுதான் என் போதையில் 
சிவந்தன உன் கண்கள்
என் மனச் சித்திரம் கலைக்காதே உன் 
நகங்களால் என் கனவின் வழி ஆகாயம் அமைத்துத்
தருவேன் உன் அலுமினிய பட்டி கழற்றி
செய்தி ஏதும் அறியவில்லை உன் குருதி
தோய்ந்த சிறகுகளில்
அறிந்தாலும் அறிவிக்க மனமில்லை
நிழல் தருவோர், நீர் தருவோர்,
நெல் தருவோர், புழு தருவோர்
மாடம் தருவோர், வானம் தருவோர்
உண்டென மயங்காதே
என் குருதியில் மிதக்கும்
நெல் மணிகளைக் கொத்த நீ தயங்காதே
நம் உறவு நேர் இப்போது
என் நரம்புகளின் வழி பறக்கலாம் வா
உன் கறி சுவைக்க ஊறுகிறது உமிழ்


No comments: