Friday, October 8, 2010

கரீமே!

கரீமே! நீ இப்படிச் செய்வாயென கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “வேரில்லா நாரெடுத்து, தூரில்லா கூடை பின்னி” என்று நிலையாமை பற்றிப் பாடி எனக்கு ஆறுதலளித்த நீயா இப்படிச் செய்தது? சொல் கரீமே சொல். உனக்காக எப்பொழுதும் போல மதுத் தேறல் குடுவைகளுடன் கடற்கரையில் நிற்கிறேன்; குணங்குடி மஸ்தான் சாகிபின் ‘மனோன்மணியே’ பாடலை நெஞ்சுருக்கும் குரலில் கானா பாடுவாயே அந்தப் பாடலுக்காகத்தான் காத்திருக்கிறேன் நான். உன் பாடலைக் கேட்டு மச்சக்கன்னிகைகள் வந்திருக்கலாம்தான்; அவர்கள் தங்கள் தங்க முலைகளைக் காட்டி உன்னை வசீகரித்திருக்கலாம்தான். சிமிழிலிருந்து எழுந்த பொற்புகையின் மேலும், அலைகளின் மேலும் நீ கால் பாவி நடந்திருக்கலாம்தான். தோட்டத்தில் காத்திருக்கத் தேவையில்லாமல் மின்னல்கள் உன்னை சொர்க்கத்தின் எட்டு கதவுகளின் வழியும் எடுத்துச் சென்றிருக்கலாம்தான்.

இந்த மீனவ மூதாட்டிகளின் ஒப்பாரி உண்மையில்லை என்று சொல், கரீமே. எனக்காக ஒரே ஒரு முறை.

No comments: