Tuesday, October 19, 2010

சருகுகள்

துக்கித்தவன்
சாவு
எழுதும் வாழ்வின் கதை
என்பதாக

குறையற்றவன்
சாவின்
மேல்
வாழ்வின் நடனமென

அடுத்த கணமறியா
காற்றேகுதல் எனினும்
வீழ்தல் நிச்சயமெனவே
ஒரு மனது கொள்ள

தற்காலிக வெளியிடம்
தற்காலிக வளியிடம்
தற்காலிக வெளியிடல்
தற்காலிகமென
மறந்தவாறே

மெலிதான
காற்றினால்
மேலே எழுந்த
சருகுகள்
சுழன்று
உருவங்களாகி
குதிப்பதாய்
வாழ்வைப்
பதியலாம்தானே

No comments: