Saturday, August 20, 2011

தூங்கும் அழகி

John Henry Fuseli's painting,'The nightmare'

















தூங்கும் அழகி என்றவுடன் உங்களுக்கு காவபட்டாவின் நாவல்
நினைவுக்கு வரலாம்
வராமலும் போகலாம்
தூங்கும்போது எல்லா பெண்களுமே அழகிகள்தானே 
என்று ஒரு கணம் நினைத்தீர்கள்தானே
அப்பொழுதே நீங்கள் ஒரு கோர அரக்கனாகிவிட்டீர்கள்
என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியாதேயென 
நீங்கள் தோள் குலுக்கி கை விரிப்பீர்கள்
அதனால்தான் மேலே அந்த ஓவியத்தை சூடாக
இணைத்திருக்கிறேன்
உங்கள் மார்பின் மேல் 
மயிரடர்ந்த கோர உரு
உட்கார்ந்திருப்பதான
பிரேமை தட்டுகிறதா
உங்கள் கிளர்ச்சி 
நீங்கள் ஒரு பெண் என்கிறது
அந்த ஜென் தருணத்தில்
கோர அரக்கனை
இறுகத் தழுவி
முத்தமிடுகிறீர்கள்

No comments: