Saturday, October 29, 2011

சாருநிவேதிதாவிற்கு எம்.டி.முத்துக்குமாரசாமி பிடித்த எழுத்தாளன் ஆனது குறித்து


குறிப்பு: சாருவின் மலையாள வாசகர்களுக்கும் உடனடியாக போய்ச்சேர வேண்டும் என்பதற்காக மலையாள வாடையுடன் இந்தக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

எழுத்தாளர் சாருநிவேதிதா

பழைய சேக்காளி, (தமிழ் இலக்கிய சிற்றிதழ் சூழலில் வயது வித்தியாசமும் கிடையாது இப்போது இணைய வாசகர்கள் பேசுவது போல சார் மோர் என்ற பேச்சு முறையும் இருந்ததில்லை) கூட்டுக்காரன், சாரு நிவேதிதா எனக்கும் ஜெயமோகனுக்குமிடையில் பாரதி சம்வாதம் கிறங்கி கிறங்கி எங்கோட்டு போயோன்னு வாசக ஜனமெல்லாம் குருவாயூரப்பனை ஒரு பாடு கூவிக் கூப்பிடலாமென்கையில் சோட்டானிக்கரை பகவதி  அருளால் நாவல் எழுதி முடித்த கையோடு விட்டார் பாருங்கள் ஒரு இடுகை எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி என்று. நானும் வாசகர்களும் வாத்து மேய்ப்பதையே முழு நேரத் தொழிலாய் செய்வதாய் சாருவுக்கு எண்ணம் போலும்.
சில பல வருடங்களுக்கு முன்பு தீராநதி பேட்டி ஒன்றில் கேட்ட கேள்விக்கு நான் ஏதோ ஒரு வரி பதில் சொல்லப்போக சாரு ‘மம்மி ரிடர்ன்ஸ்’ அப்படின்னு ஒரு துண்டுப்பிரசுரம் போட்டு, அதை எனக்கு கர்ம சிரத்தையாய் தபாலில் அனுப்பி வைத்து, இண்டெர்னெட்டில் போட்டு பெகளம் கிளப்பினது தமிழ் பப்ளிக் அறியும். ஜெயமோகனாவது என்னை ரைஃபிளோடு ஊர் திரும்பின பட்டாளத்துக்காரன்னுதான்  விளிச்சு. ஆனால் நிங்கள் என்னை பிணமாக்கியில்லே சாரு. பழைய கூட்டுக்காரனை சவக்குழியில் தள்ளி R.I.P பலகை நட்டதல்லே ‘மம்மி ரிடர்ன்ஸ்’? இப்போழ் எதிரிக்கு எதிரி நண்பன்னு ஆயிப்போயோ? பொது விவாதம் பண்ணும்போழ் எங்கெனையாக்கும் அது? நாள ஞான் ஸீரோ டிகிரி குறிச்சு பட்டம் பரப்பித்தேனெங்கில் என் சவக்குழி மேல் ஏறிச் சாடுமில்லே நீங்கள்? ரெண்டு கைப்பிடி வாக்கரிசி போட்டால் துள்ளி எழுந்து சலாம் வைக்கும் சவமென்னு அல்லே என்னை நிங்கள் நினைச்சு? அல்லெங்கில் உங்கள் ரெண்டு பேருக்குமான  லோக்கல் பாடி எலெக்‌ஷனுக்கு புறத்தே ஆரும் இண்டிபெண்டெண்டாட்டு நிக்க கழியாதா?
ஞான் அறிங்ய சாரு வெள்ளம்பியானு. அயாளை ஞான் திரிச்சு நோக்கான்பக்ஷே சந்தோஷம் உண்டும்.  

அயாளின் ஒரிஜினல் முகம் ஞான் திரிச்சி காணட்டும். 

மற்றபடி ஞான் சாருவுக்கு பிடிச்ச எழுத்தாளனெங்கில் அதுக்கு ஒரு courtesy நன்னி லிகிதம் போட்டுண்டு. 

மீண்டும் நன்றி.

2 comments:

Anonymous said...

Stylish blog!

N.Parthiban said...

Dear MDM,

Just now I read your blog and Charu's reply for it. I really dont know anything about you before Charu spoke to me about you few months back. We were actually discussing about a writer who has still not disclosed his real name and charu said it may be you as the writing style exactly matches your style and also the fact that you never liked name and fame. After that the whole night he was speaking about you and telling the good old times you people spent together and the power of your writing. he had high regards for your command on the language and felt if you had spent full time here you would reached greater heights by now...He spoke with passion and it cant be acting like you said...He at times he is better than me...Do you think it is politics??? I just now came from a trip and even in this morning time i am writing this to you because i felt you have mistaken charu and his love for your writings...

Thanks and Regards,
N.Parthiban
Charu's Greatest Fan