Thursday, January 17, 2013

சாரல் விருது 2013 பெறுபவர் பிரபஞ்சன்


நண்பர்கள் ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியன் ஆகியோரை நடுவராகக்கொண்டு வருடாவருடம் சாரல் விருது இலக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. போனவருடம் சாரல் விருது வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் வழங்கப்பட்டது. இந்த வருடம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வழங்குவதன் மூலம் இந்த விருதின் கௌரவம் மேலும் உயர்ந்திருக்கிறது. சேனை சேனையாக கிளம்பியிருக்கும் கூலிப்படைகளால் வரலாறு பல விதங்களிலும் திரிக்கப்படும் நம் சம காலத்தில், வரலாற்றினை புனைவுக்குள் உள்வாங்குவதை சிறப்பாக எழுதி கலையாக்கிய பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்' நாவல் இந்த விருதினால் மீண்டும் கவனம் பெறுவது பல வகைகளில் முக்கியமானதாகும்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் வலைத்தளம் : http://www.prapanchan.in
பிரபஞ்சனின் நூல்கள் : http://www.prapanchan.in/index.php?option=com_content&view=article&id=67&Itemid=28 

No comments: