Saturday, December 28, 2013

திறக்கும் வெகுஜன அரசியல் வெளி: அர்விந்த் கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருப்பது இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமான நம்பிக்கையளிக்கும் திருப்பு முனையாகும். அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வெகு ஜன மக்கள் போராட்டமாக மாறியபோதும். வெகு ஜன மக்கள் போராட்டத்தினை அரசியல் கட்சியாக அர்விந்த் கேஜ்ரிவால் உருமாற்றியபோதும் நான் இந்த முயற்சிகளின்பால் நம்பிக்கையற்றவனாகவும், சந்தேகங்கள் கொண்டவனாகவும்,  இளக்காரமான பார்வையுடையவனாகவுமே இருந்தேன். என்னுடைய பார்வைக்கு மூன்று முக்கிய காரணங்கள். 

முதல்க் காரணம் அன்னா ஹாசரே மதிப்பிற்குரிய முதியவராகத் தோன்றினாலும் அவர் கூரிய மதியுடையவராகவோ அரசியல் தீர்க்கதரிசனங்கள் உடைய சிந்தனையாளராகவோ தோன்றவில்லை. 

இரண்டாவது காரணம் அர்விந்த் கேஜ்ரிவால், மனிஷ் சோஸ்டியா போன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரசு சாரா நிறுவனங்களில் அந்நிய நிதி உதவி பெற்று மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் என்ற மறுக்கவியலாத உண்மை. இந்தியாவில் வெகு ஜன கட்சிகள் முன்னெடுக்காத பல முக்கியமான அரசியல் போராட்டங்களை ( தகவல் அறியும் உரிமை, இயற்கை வளங்களின் பாதுகாப்பு, ஆதிவாசிகளின் உரிமைகள், உணவு மற்றும் சத்துணவு பெறுவதற்கான உரிமை, சிறு தொழில் பாதுகாப்பு, காந்திய கிராம பஞ்சாயத்து ராஜ் ஜனநாயகம், பெண்கள் உரிமைகள்) அரசு சாரா நிறுவனங்களே கையிலெடுத்து போராடி வந்திருக்கின்றன என்பதினால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரசு சாரா அந்நிய நிதி உதவி பெற்ற/ பெறுகின்ற நிறுவனங்களின் பின் புலங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் ஊழல் எதிர்ப்பு போராட்டம் அரசு சாரா நிறுவனங்களின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுவது உள் நோக்கங்கள் உடையது என்ற வாதம் கவனிக்கத்தக்கது என்று நான் நினைத்தேன். உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற உலகளாவிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் நீக்கமற எங்கும் விரவியிருக்கும் ஊழலே இந்தியாவை முழுமையான முதலாளித்துவ நாடாக மாறவிடாமல் தடுக்கிறது என்று நினைக்கின்றன. ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் , சிறு வணிகம் போன்ற பல துறைகளிலும் தனியார்மயத்தினையும் , வெளி நாட்டு முதலீட்டினையும் கொண்டுவருவதில் ஓரளவு வெற்றி பெற்றுவிட்ட வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத் துறைகள் மூலம் இயங்கும் அந்நிய நிதி நிறுவனங்கள் இன்னும் இலவச அடிப்படை கல்வி, விவசாயம், உயர் கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான அரசு மானியங்களை தடை செய்வதிலும்   லாபமீட்டும் தனியார்மயப்பட்ட தொழில் வாய்ப்புகளாக மாற்றுவதிலும்  வெற்றி பெறவில்லை. இந்தத் துறைகளை தனியார்மயப்பட்ட தொழில் வாய்ப்புகளாக மாற்ற எராளமான அந்நிய நிதிகளை அரசாங்கத் துறைகளுக்கு வழங்கும் உலக நிதி நிறுவனங்கள் அத்தகைய நிதி நல்கைகள் அனைத்தும் அரசுத் துறை ஊழல்களினால் விளைவுகள் ஏதுமில்லாமல் விழுங்கப்பட்டுவிடுகின்றன; ஆகையால் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஊக்குவிப்பது முழு முதலாளித்துவ நாடாக இந்தியாவை மாற்றும் என்று உலக நிதி நிறுவனங்கள் நம்புகின்றன என்று தொடரும் வாதம் உண்மையானது என்றே நானும் நினைக்கிறேன். ஆகையால் ஊழலுக்கு எதிரான அன்னா ஹாசரே -அர்விந்த் கேஜ்ரிவால் போராட்ட நோக்கம் வெறுமனே  ஊழல் ஒழிப்பு மட்டுமல்ல welfare stateஇன் அத்தனை மக்கள் மைய திட்டங்களையும் ஒழித்துக்கட்டுவதுதான் என்று நான் நினைத்தேன். மேலும் இந்திய அரசுத் துறைகளில் ஊழல் என்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கடும் தலைவலியைத் தந்து கொண்டிருப்பது. கார்ப்பரேட் நிறுவனங்களும் ஊழலற்ற அரசு எந்திரம் உருவாகுவதை விரும்புகின்றன.

மூன்றாவது காரணம் ஆம் ஆத்மி கட்சி இன்று பிடித்திருக்கும் ஆட்சியும், வெகுஜன மக்கள் ஆதரவும் உண்மையில் இடதுசாரிக் கட்சிகளைச் சென்றடைய வேண்டியவை. இடது சாரிக் கட்சிகள் தொலை நோக்குடன் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை நடுத்தரவர்க்கத்தின் ஆதரவைக் கோரியும், சமூக வலைத்தளங்களின் உதவியுடன் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அவை வெகு ஜன இயக்கங்களாக எடுத்துச் செல்லத் தவறியதை ஆம் ஆத்மி கட்சி பறித்துக்கொள்வதாகவும் நான் நினைத்தேன்.  


மேற்சொன்ன மூன்று காரணங்களையும் மீறி இப்பொழுது ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைப்பதை நான் இந்திய ஜனநாயகத்தின்  திருப்பு முனையாகக் கருதுவதற்கு ஒரே காரணம்தான்: ஆம் ஆத்மி கட்சிக்கு வெகுவாக வாக்களித்தவர்கள் ஏழை மக்கள். இலவச குடிநீரும், குறைந்த விலை மின்சாரமும் வேண்டி அவர்கள்  வாக்களித்திருக்கிறார்கள். டெல்லியிலுள்ள ஏழை மக்களின் வெற்றியாகவே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அமைந்திருக்கிறது.  ஆட்சி அமைக்கலாமா என்பதற்கே மக்கள் வாக்கெடுப்பு நடத்திய கேஜ்ரிவால் தொடர்ந்து இந்த ஜனநாயகப் பண்பினை காப்பாற்றுவாரென்றால் தொடர்ந்து socialist welfare stateஇன் மாண்புகளை காப்பாற்றுவதாகவே ஆம் ஆத்மி கட்சியும் இயங்க நிர்ப்பந்திக்கப்படும். இந்திய இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அரசியல் இயக்கமாக ஆம் ஆத்மி கட்சி பரிமாணம் பெறுமென்றால் அது இன்னும் உயரிய இடத்திற்கு செல்லும்.


அந்த வகையில் அர்விந்த் கேஜ்ரிவாலின் வெற்றி நம் வெற்றி. 

Friday, December 27, 2013

மரணப்படுக்கையில் இருக்கையில் நீ யாரெனக் கேட்டால் என் சொல்வாய்?



மரணப்படுக்கையில் இருக்கையில் 
நீ யாரெனக் கேட்டால்
என் சொல்வாய்?

ஒரு பிரார்த்தனையை
ஒலிக்கும் குரலே
முழு உடலின் அசைவாக

அந்தத் தாகம்
அந்தத் தாகத்தின் நினைவு
அந்த நினைவின் துரத்தல் 
அந்தத் துரத்தலில்
அழிபடும் மரணம்
என

கூடாமல் கலைந்த மேகம்
கானலில் மறைந்த கிணறு
கனவின் தீரத்தில் ஓடிய நதி
அலையோசையற்று அடங்கிய கடல்

இருப்பினும் துளிர்க்கிறது
இலை நுனியில்
ஒற்றைத் துளி
என 

கண்ணாடியுள் ஐயோவென்று
கரைந்தோடிய பிம்பக்குவியலுள்
தப்பிப் பிழைத்த
பல 
வண்ணத்
தீற்றலென






Sunday, November 24, 2013

மிஷெல் ஃபூக்கோவின் முக்கிய உரைகள்








ஃபேஸ்புக்கில் சமணர் கழுவேற்றம் குறித்து நடந்தவரும் விவாதத்தைத் தொடர்ந்து வாசித்துவரும்  சேதுராமன் ஃபூக்கோவின் புத்தகங்களுக்கு அல்லது உரைகளுக்கு சுட்டிகள் தர முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தார். அவர் பொருட்டு ஃபூக்கோவின் உரைகளுக்கான இந்த சுட்டிகளைத் தருகிறேன். பயனுள்ளதாக இருக்கின்றனவா என்று கேட்டுப்பாருங்கள். 

சமணர் கழுவேற்றம் பற்றிய விவாதத்திற்கான ஃபேஸ்புக் சுட்டி https://www.facebook.com/mdmuthukumaraswamy/posts/10151810604068995?notif_t=like 



Wednesday, November 13, 2013

கோவை ஞானியின் வலைத்தளம்

ஃபேஸ்புக்கில் மனோமோகன் கோவை ஞானியின் வலைத்தளத்தைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து உடனே போய் பார்த்தேன். கோவை ஞானியின் வலைத்தளம் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்களின் பட்டியல் தரப்பட்டிருக்கின்றன. மேலும் கோவை ஞானி எழுதிய நாற்பது நூல்கள் இலவசமாகத் தரவிறக்கக் கிடைக்கின்றன. தமிழின் முக்கியமான மார்க்சீய சிந்தனையாளர்களுள் ஒருவரான கோவை ஞானியின் பங்களிப்புகளை அறிந்துகொள்ள, மதிப்பிட, விவாதிக்க இந்த வலைத்தளம் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.



கோவை ஞானி

கோவை ஞானியின் வலைத்தள முகவரி http://kovaignani.org 

Wednesday, November 6, 2013

“அழாதே, மச்சக்கன்னி” குறு நாவலுக்கான சில பின்னணி குறிப்புகள்













ஸிட்கிம்-குட் நிகழ்த்துதலின் ஒரு பகுதி- ஜிண்டோ தீவு -தென் கொரியா 


‘ஸில்வியா’ என்ற புனைபெயர் என்னுள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கவிதாயினி ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கையும் தற்கொலையும் கவிதைகளும் உருவாக்கிய அமானுஷ்ய ஈர்ப்பினால் 1984-இல் நான் எழுதிய முதல் கதைக்கு ஆசிரிய அடையாளமாக அந்தப் பெயரை வைத்துக்கொண்டேன். 1996 ஆம் ஆண்டில் இனி  ஸில்வியா என்ற பெயரை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தேன். துயரமும் துரதிருஷ்டமும் என்னை இனி அணுகாது என்று என் மனதிற்குள் ஒரு பிரத்யேக நம்பிக்கை. அதை எப்படி நான் பிறருக்கு விளக்குவேன்? அந்தப் பெயரில் சுமார் -பிரசுரிக்காததையும் சேர்த்து- இருநூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்; அவற்றில் முப்பது சிறுகதைகள் மட்டுமே பிரசுரம் கண்டிருக்கின்றன. அந்த முப்பது சிறுகதைகளையும் கூட நான் சேகரம் செய்து வைத்திருக்கவில்லை. பிரசுரமான கதைகளை மட்டுமாவது மீண்டும் சேகரித்து இந்தத் தளத்தில் வெளியிடலாமென்று முயற்சி செய்தவண்ணம் இருக்கிறேன். இன்னும் வெற்றி பெறவில்லை. போகட்டும். ஆனால் அடையாளங்களைத் துறப்பது அவ்வளவு எளிதான காரியமல்லவே? யாரவது ஒருவர் நான் எதிர்பார்க்காத சமயத்தில் என்னை ஸில்வியா என்றழைப்பார்; மீண்டும் ஸில்வியாவாக நீங்கள் எழுத வேண்டும் என்று சொல்வார். என்னுள் இறந்துவிட்டதாக நான் கருதிக்கொண்டிருக்கும் அந்தப் பெயரின் அதிர்வலைகள் என்னை நிலைகுலைய வைக்கும். ஈஸ்வரா சர்வேஸ்வரா என்று மனம் அரற்றும். 

என் அந்தரங்க அக வெளியின் பலவீனமான புள்ளியினை நண்பர் கே.என்.சிவராமன் மேற்சொன்னவாறே தீண்டினார். இந்த வருடம் தீபாவளி வாரத்தின்போது  நான் தெற்கு கொரியாவில் நடந்த யுனெஸ்கோ கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. தீபாவளியின் போது நான் இதுவரை வீட்டிலில்லாமல் இருந்ததில்லை. இந்த முறை தீபாவளிக்கு வெளிநாட்டில் இருக்கப் போகிறேன் என்பது என்னை தவிக்க வைத்தது. என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெளிச்சொல்லாத கோபம். அவர்களை நான் பயணம் மேற்கொள்ள இருக்கும் கடைசி தருணம் வரை விதவிதமாக சமாதானம் செய்துகொண்டிருந்தேன். எனக்கும் அந்த சமாதானம் தேவையாய் இருந்தது. ஃபேஸ்புக் வந்தததிலிருந்து ஒரு உபயோகம் என்னவென்றால் நான் பயணங்கள் செல்லும்போதெல்லாம் எங்கெங்கு இருக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் check in செய்வேன். என் மனைவியும் குழந்தைகளும் அந்த இடங்களைப் பார்த்து வைத்துக்கொள்வார்கள். நான் வீடு திரும்பியதும் அந்த இடங்களை பற்றி என் மகன்களுக்கு ஏராளமான கேள்விகள் இருக்கும். இன்னொரு உபயோகம் நண்பர்களும் நானும் சந்திக்க வேண்டிய இடங்களை பகிர்ந்து கொள்வது. கொரியாவுக்கு கோலாலம்பூர் வழி பறந்து சென்றால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்றிருந்தார் என்னுடைய ஃப்ரெஞ்சு தோழி. அவர் பாரிசிலிருந்து லாவோசுக்கு கோலாலம்பூர் வழி செல்வதாய் இருந்தார். இணையத் தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் நான் எங்கிருக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் அறிவித்த வண்ணம் இருந்தேன். என்னை கே.என். சிவராமன் தொடர்ந்து கொண்டிருந்தார். பயணம் கிளம்பியபோது கொரிய பயண அனுபவத்தை வைத்து ஸில்வியா கதை எழுதுமாறு தூண்டிய அவர் ஊர் திரும்பிய உடன் ‘மச்சக்கன்னி’ என்னுடன்  வந்திருக்கிறாளா என்று கேட்கத் தவறவில்லை. 

எம்.டி.முத்துக்குமாரசாமியாக எழுதிய சிறுகதைகளின் தலைப்புகளில் எனக்குப் பிடித்த கதைத் தலைப்பு ‘மீனாள் அழுகிறாள், ரகுநந்த’. அந்தத் தலைப்பு கொரிய பயணம் போல இன்னொரு விமான பயணத்தின்போது தூக்கமின்மையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென நானே எனக்குள் ‘மீனாள் அழுகிறாள், ரகுநந்த’ என்று சொல்லிக்கொண்டேன். அந்த வாக்கியத்தின் வசீகரத்தினால் மேலும் மேலும் உள்வாங்கப்பட்டு ஸ்டானிஸ்லவ்ஸ்கியின் நாடக நடிகனைப் போல பல தொனிகளில் சொல்லிப்பார்த்தேன். கடைசியில் எழுதப்பட்ட கதையிலும் கூட பல தொனிகளில் ‘மீனாள் அழுகிறாள், ரகு நந்த’ என்ற வரி வருகிறது. என் அனுபவங்களுக்கும் கதைகளுக்கும் உள்ள உறவு இந்த மாதிரியானதுதான். கோலாலம்பூர் விமான நிலையத்தில்  என் ஃப்ரெஞ்சுத் தோழியினை சந்தித்தபோது அவர் நான் எதற்காக கொரியா செல்கிறேன் என்று கேட்டார். சட்டென்று ‘மச்சக்கன்னிகளை சந்தித்து கதை எழுத’ என்றேன். கூடவே ‘என் மச்சக்கன்னிகளுக்கு மீனுடலும் வாலும் இடுப்பிலிருந்து வளர்ந்திருக்காது; சாதாரண பெண்கள்தான் அவர்கள் ஆனால் அவர்கள் தரையில் நடந்து செல்லும்போது நீந்துவதுபோல அவர்களின் கைககளை கொரிய விசிறிகளைப் போல விசிறிக்கொண்டே மிதந்து செல்வார்கள்’ என்றேன். ‘நீ இன்னும் மாறவே இல்லை’ என்று என் தொந்தியில் குத்தி சிரித்தார் என் தோழி. எழுதப் போகும் கதையில் யாரும் அழமாட்டார்கள் என்று தோன்றியது. ஆனால் அழுகையும், கேவலும், ஒப்பாரியும் இல்லாமல் கலை இலக்கியம் இல்லையே என்றும் தோன்றியது. ஆகச் சிறந்த ஒப்பாரியை எப்படி கலாபூர்வமாக வைப்பது என்பதுதானே இலக்கியம்? மரணங்களை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் கண்ணீரையும் கம்பலையையும் வார்த்தைகளுக்குள் ஒளித்து வைக்கவேண்டும். அந்த அழுகை வாசக வாசகியரைத் தொற்றவேண்டும். அவர்கள் கண்ணீரின் கறை எப்போதுமே உலர்ந்துவிடலாகாது. அதுதானே இலக்கியம். நான் இந்தக் கதையில் அதைச் செய்யமாட்டேன் இந்தக் கதையில் யாரும் அழமாட்டார்கள் அப்படி அழுதாலும் ‘அழாதே மச்சக்கன்னி’ என்று நான் அழுபவர்களைத் தேற்றிவிடுவேன் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். கூடவே நானும் என் அகத்தின் தீராத அழுகையிலிருந்து விடுபட்டுவிடுவேன். ‘அழாதே மச்சக்கன்னி’ என்பதுதான் தற்காலிக கதைத் தலைப்பு என்று டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குறித்தேன்.

தென்கொரியாவில் நடந்த யுனெஸ்கோ கருத்தரங்கு ஒரு வகையில் வித்தியாசமானது; ஆசிய சாமியாடிகளின் மாந்தரீகங்களின் (Shamans and shamanistic heritage of Asia)  பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கான செயல்முறைக் கருத்தரங்கு. நான் பல ஆதிவாசி சாமியாடிகளைய்ம் மாந்தரீகர்களையும் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதால் என்னை இந்திய அரசு பொறுப்பதிகாரியின் சிபாரிசின் பேரில் என்னை அழைத்திருந்தார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைக்களுக்கு எதிராக போராடிய டாக்டர் நரேந்திர டாபோல்கரின் கொலைக்குப் பிறகு மகாராஷ்டிர  மாநிலம் இயற்றிய மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் இந்தியா முழுக்க அமல்படுத்தப்படுமானால் எத்தனை உண்மையான சாமியாடி மரபுகள் மூடநம்பிக்கை என்று ஒழித்துக்கட்டப்படும் என்பதும், அதேசமயம் ஆசாராம் போன்ற சாமியார்கள் இந்திய மரபுகள் பலவற்றினையும் கீழ்மைப்படுத்தி வருவதும் என்ன மாதிரியான சிக்கல்களை உண்டாக்கியிருக்கின்றன என்பதைச் சொல்வதாகவும் என் கட்டுரையை எழுதியிருந்தேன். மனித மனத்தின் நோய்களைக் குணப்படுத்த கிராமத்து சாமியாடிகள், ஆதிவாசி மாந்தரீகர்கள் ஆகியோர் கையாளும் உத்திகள் நிஜமாகவே குணப்படுத்துகின்றன என்பதினை சுதிர் காக்கர் எழுதியிருப்பதை ஆதாரம் காட்டி என்னுடைய ஆராய்ச்சிகளிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குவதாக என் கட்டுரை அமைந்திருந்தது. அந்தக் கட்டுரைக்காக மனித மனத்தின் விசித்திரங்கள் பற்றியும் என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. 

கொரியாவின் இந்தோசென் விமானநிலையத்தில் நான் இறங்கியபோது தூக்கமின்மையாலும். கால இட குழப்பங்களினாலும் வெகுவாக சோர்ந்திருந்தேன். என்னை வரவேற்க விமானநிலையத்திற்கு வந்திருந்த கொரிய இளம் பெண் அதிகாரிகள் சித்திரப்பாவைகள் போல இருந்தனர்; அவர்கள் இரு உள்ளங்கைகளையும் விரல்களையும் விரித்து விசிறிகளைப் போல ஆட்டியது நான் கனவில் கண்ணீர் துடைத்த மச்சக்கன்னியின் கை அசைவுகளாகவே இருந்தன. என்னை விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஏழுமணி நேர பயணமாக தென்கொரியாவில் தெற்கு மூலையில் இருக்கும் இருக்கும் ஜிண்டோ தீவுக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றார்கள். பஸ்ஸில் வியட்நாம், மியன்மார், ஜப்பான், மங்கோலியா, கொரியா தேசங்களைச் சேர்ந்த நிகழ்த்துகலைஞர்களும், பூட்டான், துருக்கி, லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் என்னுடன் பயணம் செய்தனர். 

தென்கொரியா சிறு சிறு மலைகளாலும் இடைப்பட்ட சமவெளிப்பிரதேசங்களாலும் ஆனது; சகதிக்கடற்கரைகளைக் கொண்ட கடற்பரப்புகளால் சூழப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியா படு ஏழ்மையான ஒரு நாடு. பல போர்களினால் சீரழிக்கப்பட்டது. இன்று அந்த நாட்டில் பயணம் செய்யும் எவருக்கும் அந்த நாடு எப்படி செல்வந்த நாடாகியது என்ற ஆச்சரியமே பிரமிக்க வைக்கும். பிரமாதமான அகண்ட சாலைகள், வானளாவிய கட்டிடங்கள், மலைகளைத் துளைத்து இடப்பட்ட பாதைகள், செவ்வனே காப்பாற்றப்பட்ட விவசாயம், சாம்சங், ஹியுண்டாய் என்று பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்கள் என்று  எங்கள் பயணம் கொரியாவின் சாதனைகளை எங்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தத்து. என் அருகே அமர்ந்திருந்த கொரிய இளம்பெண் அதிகாரி கொரிய தாய்மொழி வழிக் கல்வியே கொரியாவின் அதிவேக முன்னேற்றத்திற்குக் காரணம் என்று சொல்லிக்கொண்டு வந்தார். கேட்பதற்கே இதமாக இருந்தது.

ஒரு பயணக்கட்டுரையை எழுதுவது என் நோக்கமல்ல என்பதாலும் என் குறு நாவலுக்கான பின்னணி விபரங்களைத் தருவதே என் நோக்கம் என்பதினாலும் சுற்றுலா விபரக்குறிப்புகளை நான் இங்கே மேலும் தரப்போவதில்லை. 

ஜிண்டோ தீவு நம்ம ஊர் ராஜபாளையம் நாய்கள் போல தோற்றத்தில் இருக்கும் ஒரு வகை நாய்களுக்காக கொரியா முழுக்க பிரசித்தி பெற்றது. ஜிண்டோ நாய்களுக்கான ஒரு அருங்காடசியகம் இங்கே இருக்கிறது. மலைக்குன்றின் உச்சியில் இருந்த ஜிண்டோ ஹோட்டலின் நான்காவது மாடியில் இருந்த என் அறையிலிருந்த பால்கனி நோக்கிய சுவரளவு ஜன்னலின் திரைகளை விலக்கியபோது கடலும் வானமும் என் கண் எதிரே விரிந்தன. “இதுதான் இதுதான் இதே இடம்தான் என் கதை நிகழும் கடற்கரை” என்று என் மனம் கும்மாளமிட்டது. பெயர் தெரியாத பறவைகள் உம் கொட்டிப் பறந்தன. டாலியின் ஓவியம் ஒன்றின் பின்னணி போல சாம்பல் நிறத்தில் கடலும் வானும் சகதிக்கடற்கரையும் இணைந்து கிடந்தன. குளிர் நடுக்க நடுக்க பால்கனியின் கண்ணாடிக் கதவுகளை திறந்து வைத்தேன். நட்சத்திரங்களின் கோட்டுருவமாய் அவளின் முகம் வானத்தில் தோன்றியது. அழாதே மச்சக் கன்னி என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டே எழுதினேன். அவள் தன்  இரு உள்ளங்கைகளையும் விரல்களையும் விரித்து  விசிறி போல ஆட்டி வா வா என்றழைத்தாள். நான் பால்கனியை நோக்கி ஓடினேன். எது என்னை பால்கனியிலிருந்து கீழே குதிக்க விடாமல் தடுத்தது என்று எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை. மறு நாள் குளிர் நடுக்க பால்கனி கதவுகளை மூடாமலேயே தூங்கியிருக்கிறேன் என்று தெரியவர கண் முழித்தேன். வேறொரு அமானுஷ்ய உலகில் நுழைந்து மீண்டதாகத் தோன்றியது. 

இரண்டு நாட்கள் கழித்து ஜிண்டோ தீவின் புகழ் பெற்ற நிகழ்த்து கலையான ‘ஸிட்கிம்-குட்டினை’ பார்ப்பதற்காக திறந்த வெளி அரங்கில் அமர்ந்திருந்தேன். நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த கொரிய பெண் சாமியாடி என்னருகே வந்தார்.  அவர் கூடவே மொழிபெயர்ப்பாளரும் வந்தார். “வந்தவுடனேயே பார்த்துவிட்டாய் போலிருக்கிறதே” என்று கூறி சிரித்தார் சாமியாடிப் பெண். நான் ஆமாம் ஆமாம் என்பதுபோல மண்டையை உருட்டி வைத்தேன். “கவலைப்படாதே இன்று அந்த ஆத்மாக்கள் தூய்மையாகிவிடும் ‘ என்று சொல்லிவிட்டுப் போனார். ஸிட்கிம்-குட் ஒரு வகையான தெவசச் சடங்கு நிகழ்த்துதல். என்னுடன் பேசியவர் அந்த சடங்கினை நிகழ்த்தும் முக்கிய பாடகி. ஏழு எட்டு மணி நேரம் நீடிக்கும் அந்த நிகழ்த்துதலில் அவர் ஒரு காகித சாமரத்தை விசிறிக்கொண்டே பாடி இறந்த ஆத்மாக்களை தூய்மைப்படுத்தி சொர்க்கத்திற்கு அனுப்புவார். அன்று அந்த நிகழ்த்துதலைப் பார்த்து சுமார் இருபத்தைந்து பக்கங்களுக்கு குறிப்புகள் எடுத்தேன். அந்தக் குறிப்புகளின் விரிவாக்கத்தையே நான் இந்தக் குறு நாவலாக எழுத விழைகிறேன். பதினைந்து இருபது அத்தியாயங்கள் வரலாம். கதை எப்படிப் போக வேண்டும் என்று எந்தத் திட்டங்களும் என்னிடத்தில் இல்லை.  

சென்னை திரும்பியதும் ஃபேஸ்புக்கில் check in செய்தேன். கே.என்.சிவராமன் மச்சக்கன்னி வந்து விட்டாளா என்று கேட்டு பின்னூட்டமிட்டார். உற்சாகமாக இருந்தது. அவருக்கு என் நன்றிகள்.  மங்கோலிய சாமியாடி எனக்கு சில நெல்மணிகளைக் கொடுத்தார், வியட்நாமிய சாமியாடி இனிப்பு, 2000 கொரிய வோன்கள், சிறிய சாவிக்கொத்தை ஆகியன தந்தார், கேரளத்து கல்லுருட்டி பூதம் மல்லிகையும் செவ்வந்தியும் தந்தார், கொரிய சாமியாடி அரிசிக்கள்ளும் இனிப்பும் தந்தார் என்று நான் பட்டியலிடும்போதே அந்த அமானுஷ்ய கதை என்னுள் விரிய ஆரம்பிக்கிறது. மச்சக்கன்னீ அழாதே!


Sunday, October 27, 2013

Sylvia Plath reads "A Birthday Present"




Sylvia Plath (documentary) complete




Sylvia Plath would have turned 81 years old today. It’s a strange thing to imagine. Plath’s reputation as a poet is so sadly bound up with her death by suicide at the age of 30, and so many of the lines in her later poetry sound like suicide notes, that it seems impossible to picture her making it to old age. In “Lady Lazarus,” Plath writes: “Dying/Is an art, like everything else./I do it exceptionally well.”


Wednesday, October 16, 2013

JOHN TURTURRO reads a short story by Italo Calvino




The animated video above features Turturro reading “The False Grandmother,” Calvino’s reworking of Little Red Riding Hood. Kevin Ruelle illustrated the clip, which was produced as part of Flypmedia’s more extensive coverage of Turturro’s adaptation.

Monday, October 14, 2013

Bizet - Carmen (1997) (English subtitles) _opera





என்னுடைய 'மைத்ரேயி' சிறுகதையில் வரும் 'கார்மன்' இசை நாடகத்திற்கான (opera)  குறிப்பினை வைத்து சேதுராமன் அந்த இசை நாடகத்தைப் பற்றி எழுதுங்களேன் என்று கேட்டிருந்தார். ஐரோப்பாவில் நான் இந்த இசை நாடகத்தை பல நாடுகளில் பல அரங்குகளில் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பற்றிய குறிப்புகளெல்லாம் நேற்று சரஸ்வதி பூஜைக்காகவும் இன்று விஜயதசமிக்காகவும்  என் புத்தக அலமாரிகளை ஒழுங்குபடுத்தியபோது கிடைத்தன. இணையத்தில் தேடிப்பார்த்தபோது மேற்கண்ட முழு இசை நாடகமும் யுடூபில் கிடைத்தது. சேதுராமனுக்காக அதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

போர்த்துகீசிய கன்னிகாஸ்த்ரீ/ 1 2009 (+playlist)/திரைப்படம்




http://www.youtube.com/watch?v=VMg5oz5TTgA&list=PL8C5C065A00DED0AE

எனக்கு மிகவும் பிடித்த சமீபத்திய ஐரோப்பிய திரைப்படங்களில் ஒன்று. ஆர்ப்பாட்டங்களில்லாத நுட்பமான படம். 

Saturday, October 12, 2013

The Metamorphosis - A Study: Nabokov on Kafka (1989) Christopher Plummer





“From my point of view,” writes Vladimir Nabokov inLectures on Literature, “any outstanding work of art is a fantasy insofar as it reflects the unique world of a unique individual.”

Monday, October 7, 2013

Secret Tibetan Book of the Dead


வேதங்கள்


கீழ்க்கண்ட சுட்டியில் மிக இனிமையாக சாம வேதம் ஓதப்படுவதைக் கேட்கலாம்,

http://www.asia.si.edu/podcasts/player.asp?song=Woodley1&parts=1

வேதங்கள் முழுவதும் ஓதுவதை கேட்பதற்கு (இடையிடையே வரும் அசட்டு வர்ணணைகளை ஒதுக்கிவிடுங்கள்)

பாகம் 1

பாகம் 2


Sunday, October 6, 2013

ஆசிய இசை

ஆசிய இசைக் கச்சேரிகளை கேட்க விரும்புவோருக்கு சிமித்சோனியன் மியூசியத்தின் http://www.asia.si.edu/podcasts/concert.asp தளம் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். இந்தத் தளத்திலுள்ள கச்சேரிகளைக் கேட்டுப்பாருங்கள்.

Friday, September 27, 2013

International Symposium on Safeguarding Asian Shaman Heritage/ தென்கொரியா செல்கிறேன்

International Symposium on
Safeguarding Asian Shaman Heritage


1.
Project title
International Symposium on Safeguarding Asian Shaman Heritage
2.
Date / Venue
13 November 2013, Jindo, Republic of Korea
3.
Participants
ICH Experts, scholars and performers from Bhutan, India, Japan,Mongolia, MyanmarPhilippines, Turkey, Viet Nam, and Korea
4.
Hosted by
Jindo County, Republic of Korea
5.
Organised by
International Information and Networking Centre for Intangible Cultural Heritage in the Asia-Pacific Region under the auspices of UNESCO (ICHCAP)
6.
Sponsored by
Cultural Heritage Administration of Korea
1. Outline
TitleInternational Symposium on Safeguarding Asian Shaman Heritage
ObjectivesDraw up cooperative measures to safeguard the shaman heritage,primitive intangible cultural heritage distributed over the entireAsian region, through international symposium and related events
Date/Venue13 November 2013 / Jindo County, Republic of Korea
ParticipantsApproximately 150 participants
Participant countries: Bhutan, India, Japan, Mongolia, Myanmar,Philippines, Turkey, Viet Nam, and Korea
- Participants: 150 participants (subtotal)
20 domestic scholars and researchers
10 nternational experts, 40 international performers
20 secretariats and organisers from Jindo and ICHCAP
60 public participants
Hosted ByJindo County, Republic of Korea
Organised ByICHCAP
Sponsored ByCultural Heritage Administration of Korea
ContentsHold an international symposium on the diversity and commonality ofshaman heritage in Asia
 Present on current safeguarding status and challenges of
Shaman heritage by each country
 Seek measures for safeguarding the shared shaman heritagethrough international cooperation
- Hold public events (performances) related to shaman heritage frominvited countries

2Provisional Programme

A. Opening Ceremony
Opening remarks
Welcoming remarks
Keynote speech

B. Session 1: The Diversity and Commonality of Shaman Heritage in Asia
 Shaman Heritage in North-East Asia
∙ Presentation 1. Current Safeguarding Status and Challenges of Shaman Heritage in Mongolia / Dr. Sodnomdorj Yanjinsuren (Professor, Department of Religious Studies, National University of Mongolia)
 Presentation 2. Current Safeguarding Status and Challenges of ShamanHeritage in Korea / Dr. Kim Hun-Sun (Professor, Department of KoreanLanguage and Literature, Kyunggi University)
 Presentation 3. Current Safeguarding Status and Challenges of Shaman Heritage in Japan / to be determined
C. Session 2: The Diversity and Commonality of Shaman Heritage in Asia
 Shaman Heritage in South-East Asia
 Presentation 4. Indigenous Ritual Specialists in the Philippines / Dr. Jesus Peralta (Consultant, National Commission for Culture and the Arts)
  Presentation 5. Working with Community for Identifying Len Dong-Vietnamese Shaman as a Heritage / Dr. Le Thi Minh Ly (Deputy Director,the Center for Research and Preservation of Rituals and Believes of Vietnam) 
 Presentation 6. Safeguarding Strategies for Myanmar Shaman heritage / Dr. Mya Mya Khin (Professor, Department of Anthropology, Yangon University)
D. Session 3: The Diversity and Commonality of Shaman Heritage in Asia
 Shaman Heritage in South-West Asia
 Presentation 7. The cultural struggles of shamanistic healing traditions in India / Dr. MD Muthukumaraswamy (Director, National Folklore Support Centre in India)
∙ Presentation 8. Current Safeguarding Status and Challenges of ShamanHeritage in Bhutan / Ms. Tshering Choki (ICH Researcher, Department of Culture, Ministry of Home and Cultural Affairs, Bhutan)
∙ Presentation 9. Current Safeguarding Status and Challenges of ShamanHeritage in Turkey / Dr. Ozkul Cobanoglu (Professor, Department of Turkish Language and Literature, Hacettepe University)

E. Discussion: Cultural Heritage Value of Asian Shaman Heritage and Safeguarding Measures  

3. Related Events

A.Lecture Demonstration of Asian Shaman Heritage
Date: 1 November 2013
Venue: Jindo Intangible Cultural Heritage Centre
Operated by: The World Ethnic Dance Institute (WEDI)
Outline
      - Organise a lecture demonstration of Asian shaman ritual performances of performing groups invited from Mongolia, Japan, Viet Nam, Myanmar, and India.


BSpecial Programme of Jindo Intangible Cultural Heritage Festival
(Representation of Primitive Culture of Humanity-Shaman Heritage in Asia)
Date: 2 November 2013
Venue: Jindo Intangible Cultural Heritage Centre
Operated by:
Outline
      Organise international shaman ritual performances of performing groups invited fromMongolia, Japan, Viet Nam, Myanmar, India, and Korea.

CJindo Intangible Cultural Heritage Festival
Date: 3 November 2013
Venue: Jindo Intangible Cultural Heritage Centre
Operated by: Jindo County
Outline
- Watch the ICH performance by Jindo performing groups



Wednesday, September 18, 2013

டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டமும் வெற்றியும்

Photo courtesy http://www.survivalinternational.org/tribes/dongria 





ஒடிஷா மாநிலத்தில் நியமகிரி மலைப்பகுதியில் வாழும் டோங்கிரியா கோண்ட் (Dongria Kondh) பழங்குடியினர் தங்கள் மலைகளில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் தாதுவினை வெட்டி எடுக்க திறந்தவெளி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்திய உச்ச நீதி மன்றம் டோங்கிரியா கோண்ட் கிராம சபைகளின் சம்மதமும் அனுமதியும் இல்லாமல் வேதாந்தா தன் சுரங்கத்தை அமைக்க முடியாது என்று இந்த வருடம்  ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது; இந்திய பழங்குடிகளுக்கு இயற்கை வளங்களின் மேல் உள்ள பாரம்பரிய உரிமைகளுக்கு வலு சேர்க்கக்கூடியது; கிராமசபை போன்ற அடிமட்ட ஜனநாயக அமைப்புகளின் மேலாண்மையை உறுதிப்படுத்துவது; இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் மைய வழிகாட்டுதலை வழங்கக்கூடியது. டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டத்துக்கு ஆதரவான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அவ்வளவு எளிதாக இந்த எளிய மக்களுக்குக் கிடைத்துவிடவில்லை.    

திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியினை பேசும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர்  நுட்பம் மிகுந்த பல கலைகளை தங்கள் பாரம்பரியமாகக் கொண்டவர்கள். கழுத்தை நிறைக்கும் உலோக அணிகலன்கள், காதுகளிலும் மூக்கிலும் பல வளையங்கள், நுட்பமான கை வேலைப்பாடு நிறைந்த துணிகள், திரைச் சீலைகள், சுவரோவியங்கள் நிரம்பிய மண் வீடுகள் ஆகியன டோங்கரியா கோண்ட் பழங்குடியினரை எளிதில் அடையாளம் காட்டக்கூடியவை. நியமகிரி மலைச்சரிவுகளில் உள்ள காடுகளில்ராயகாடா, காளஹண்டி, கோராபுட் ஆகிய மாவட்டங்களில் வாழும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். 2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின்படி டோங்கிரியா கோண்ட் மக்களின் எண்ணிக்கை 7952 மட்டுமே. அவர்கள் முற்றிலும் அழிந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதினால் இந்திய அரசியல் சாசனத்தின் ஐந்தாவது ஷெட்யூலின் ஷரத்துக்களின்படி  டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் பாதுக்காக்கப்பட வேண்டியவர்கள்

டோங்கிரியா கோண்ட் மக்கள் நியமகிரி மலைகளையும் அவற்றிலிருந்து உற்பத்தியாகி ஓடிச் செல்லும் நீரோடைகளையும் தங்கள் கடவுளர்களாகக் கருதுவதே அவர்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கிய காரணமாகும். நியமகிரி மலைகளைநியமராஜா’, ‘ஆதி சட்டங்களை இயற்றியவர்என்றும் பூமியைதாரிணிப் பெண்என்றும் அவர்கள் வழிபடுகின்றனர். நியமகிரி மலைகள் இருக்கும் வரையே தங்கள் இனமும் உயிரோடு இருக்கும் என்று உறுதியாக நம்பும் டோங்கிரியா கோண்ட் மக்களின் தலைவர் லாடு சிகாகாஎங்கள் கடவுள்கள் திறந்த வெளியில் இருப்பவர்கள்; அவர்கள் உங்கள் கடவுள்களைப் போல அறைக்குள் பூட்டி வைக்கப் படுபவர்கள் அல்லஎன்று குறிப்பிட்டார். வேதாந்தாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அமைதியான அகிம்சை வழியில் நடத்திச் சென்ற லாடு சிகாகாவும் நியமகிரி மலைகளின் உச்சியில் வாழும் பன்னிரெண்டு கிராம மக்களும் சர்வதேச கவனத்தையும் கவர்ந்தனர். சர்வைவல் இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நிதியும் அறிவுஜீவிகளின் ஆதரவையும் கோரி பிரச்சாரம் மேற்கொண்டது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற படமானஅவதார்படத்தின் கதையைப் போன்றதே டோங்கிரியா கோண்ட் மக்களின் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டம் என்ற பிரச்சாரம் பல வகைகளிலும் இந்த மக்கள் போராட்டத்தினை பிரசித்தி பெறச் செய்தது. ‘அவதார்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரனுக்கு டோங்கிரியா கோண்ட் மக்கள் சார்பில் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மனு அனுப்பப்பட்டது. எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகை யோஹன்னா லும்லெ, நடிகர் மைக்கேல் பாலின் ஆகியோர் டோங்கிரியா கோண்ட் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பிரிட்டிஷ் நாளிதழானதி கார்டியன்நியமகிரி மலை போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது.

பாக்சைட்டைத் தோண்டி எடுப்பதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமலேயே அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை ஒடிஷாவிலுள்ள லஞ்சிகாரில் அமைத்ததிலிருந்தே வேதாந்தா பல விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாகப் பலரும் குற்றஞ் சாட்டி வருகின்றனர். ஒடிஷா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தாவின் லஞ்சிகார் ஆலை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்துவதாக கண்டித்ததுஅம்னெஸ்டி இண்டெர்நேஷனல் வேதாந்தாவின் ஆலையிலிருந்து வெளிவரும் தூசு மக்களின் உடைகளில், பயிர்களில், உணவுகளில் படிவதாகவும் இது மனித உரிமை மீறல் பிரச்சினை என்றும் குற்றம் சாட்டியது. சுற்றுச் சூழல் ஆய்வாளர்களால் வேதாந்தா ஆலை பரிசோதிக்கப்பட்டபோது அதன் லஞ்சிகார் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு வம்ஷதாரா நதியினை கடுமையாக மாசு படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு நியமகிரி மலையில் பாக்சைட் அகழ்ந்தெடுப்பதற்கான திறந்தவெளி சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி கேட்டு வேதாந்தா ஸ்டெர்லைட் தொழில் நிறுவனங்களோடு சேர்ந்து விண்ணப்பித்தபோது அது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் நிராகரிக்கப்பட்டது. மக்களின் ஆதரவினை வேண்டி பல பிரச்சாரங்களை மேற்கொண்ட வேதாந்தா டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் கிராமங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைப்பதாக விளம்பர பேனர்களை அமைத்தது. அந்த பேனர்களெல்லாம் இன்று துருப்பிடித்துக் கிடக்கின்றன.  

2013 ஏப்ரல் மாத உச்ச நீதி மன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து வேதாந்தா சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பன்னிரெண்டு டோங்கிரியா கோண்ட் கிராமங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசாங்கம், மாவோஸ்டுகளினால் வன்முறை நடந்தேறக்கூடும் என்று அச்சம் தெரிவித்து, ஏராளமான போலீஸ் படையையும்  துணை ராணுவப் படையினரையும் நியமகிரி மலைகள் முழுக்கக் குவித்தது. எந்த நேரமும் கலவரம் வெடிக்ககூடும், துப்பாக்கிச்சூடு நிகழக்கூடும் என்ற சூழலில் வாக்களித்த டோங்கிரியா கோண்ட் மக்கள் நூறு சதவீதம் வேதாந்தா பாக்சைட் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர்

வாக்கெடுப்பு நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டாலும் பயமும் பீதியும் நியமகிரி மலைகளில் தொடர்வதாக பங்கஜா சேதி என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார். டோங்கிரியா கோண்ட் மக்களின் துணிகளிலுள்ள கதையாடல்களையும் கைவேலைப்பாடுகளையும் ஆராய்ச்சி செய்து வரும் பங்கஜா சேதி டோங்கிரியா கோண்ட் மக்களின் நியமகிரி மலை நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கலந்து நிற்பதால் அவை மாறவே மாறாது என்றும் நம்பிக்கையூட்டுகின்றார்.

இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்குக்காக, இந்திய கார்ப்பரேட் சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்திற்காக இந்தியத் துணைக்கண்டத்தின் பழங்குடியினர் பெரும் விலை கொடுத்திருக்கின்றனர். அணைகள் அமைப்பதற்காக, கனிமச் சுரங்கங்கள் தோண்டுவதற்காக, மின்சாரம் தயாரிப்பதற்காக தங்கள் காடுகளை, மலைகளை, வசிப்பிடங்களை, பாரம்பரிய உரிமைகளை இழந்து பழங்குடியினர் துரத்தப்பட்டிருக்கின்றனர். தங்கள் மொழிகளை இழந்து, பண்பாட்டு வளங்களை இழந்து தாங்கள் அரசர்களாக ஆண்ட பகுதிக்கு வெகு அருகாமையிலேயே தரித்திரர்களாக இந்தியா முழுவதும் பழங்குடியினர் இன்று வாழ்ந்துவருகின்றனர்
டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்ட வெற்றியும் அதற்கு வழி செய்த உச்ச நீதி மன்ற தீர்ப்பும் இந்தியப் பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்குமான முதல் படிகளாகும்.