Tuesday, June 13, 2023

நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்- மஹ்மூத் தர்வீஷ்- தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

 

விரைவில்...
கோவை புத்தகக் கண்காட்சி வெளியீடு: 01

"நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?"
| மொழிபெயர்ப்புக் கவிதைகள் |

@ மஹ்மூத் தர்வீஷ்

தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

*
நட்சத்திரங்களுக்கு எந்தப் பங்குமில்லை 
எனக்கு வாசிக்கச் 
சொல்லித் தந்ததைத் தவிர 
ஆகாயத்தில் எனக்கொரு மொழி இருக்கிறது 
பூமியிலும் எனக்கொரு மொழி இருக்கிறது 
நான் யார்? 
நான் யார்? 
* 
கவிதை என்பது இங்கேயும் அங்கேயும் இல்லாமல் இடைநின்று 
இரவுகளைப் பெண்ணின் மார்புகளால் ஒளியூட்டுவது 
ஒரு ஆப்பிளின் இரு உடல்களை ஒளியூட்டுவது 
வாசனை நிரம்பிய பூக்களையுடைய கார்டேனியா மரத்தின் கூவல் போல 
தாய்நாட்டைத் திரும்பக்கொண்டு வருவது 
* 
என் முன்னால் இருக்கும் கவிதை 
பழங்கதையின் தாதுக்களை என் கையால் நகர வைக்கக்கூடியது 
ஆனால் நான் 
கவிதையைக் கண்டடைந்த மாத்திரம் என்னிடமிருந்து என்னை நாடு கடத்திக்கொண்டேன் 
அதனிடம் கேட்டேன் 
நான் யார்? 
நான் யார்? 
- மஹ்மூத் தர்வீஷ்
** 

•அணிந்துரை: ஜமாலன்

•அட்டை: றாஷ்மி

•வடிவமைப்பு: யுகாந்தன்

•வெளியீடு: தமிழ்வெளி

No comments: