Sunday, January 22, 2012

‘அநாதையின் காலம்’- அறிவிப்பு




விகடதுன்பங்கள் இடுகையைத் தொடர்ந்து ‘அநாதையின் காலம்’ எப்போது வெளிவரும் என்று கேட்டு எழுதிய நண்பர்களுக்கு நன்றி.
‘அநாதையின் காலம்’ கிட்டத்தட்ட 120 பக்கங்கள் வரக்கூடிய ஒரே நீள்கவிதை; கவிதைகளின் தொகுதி அல்ல. முழுமையாகத் திருத்தியபின் பக்கங்கள் குறையலாமே தவிர கூடாது. ‘நீர் அளைதல்’ வெளியானது போலவே மின் பதிப்பாக தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியிட உத்தேசித்திருக்கிறேன். ‘நீர் அளைதல்’ தொகுதியை epub வடிவத்தில் வெளியிட இயலவில்லை. Epub வடிவத்தில் மாற்றும்போது தமிழ் எழுத்துரு சிதைந்து போனது. இப்போது அதை சரி செய்துவிட்டேன். ‘அநாதையின் காலம்’ pdf ஆகவும் கைபேசி, ஐபேட் போன்ற கருவிகளில் வாசிக்கத் தகுந்த விதத்தில் epub ஆகவும் வெளிவரும். விலைக்கு விற்பதாக இல்லை.

1 comment:

Anonymous said...

விலைக்கு விர்ப்பதில்லை என்ற வாசகம் இணைய பிசைக்கரர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்துகிறது. ஓசிக்கு நன்றி. "ராகம்" ரமேஷ் குமார்.
.