Monday, August 15, 2011

காப்புரிமை நோட்டீஸ்


இந்தத் தளத்தில் வெளியாகும் பதிவுகள் எல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு (மேலே பெயர் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறது) சொந்தமானவை. இப்பதிவுகளை காப்பியடித்தாலோ, காப்பியடிக்க திட்டம் தீட்டினாலோ, காப்பியடிக்க நினைத்தாலோ சொற்களுக்குள் பொதிந்து வைத்துள்ள மந்திரங்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்பதை இதைப் படிப்பவர்கள் அறிவார்களாக. சொற்களின் சக்தி அவரவர் ஜாதக பலன் பொறுத்தும், படிக்கின்ற நாள், கிழமை, திதி பொறுத்தும் மாறுபடும். முழு பலன் தருமிடத்து ரத்த வாந்தி காணும்; பேதி புடுங்கும். வாயில் நுழையாத பெயருள்ள புதுப் புது மன நோய்களும், உடல் உபாதைகளும் ஆட்டுவிக்கும். பிராயசித்தம் கிடையாது. இந்த காப்புரிமை நோட்டீஸை வேருள்ள சிந்தனையாகக் காண்பது அவரவர் குலம், தரிசனம், உள்ளொளி, ரசனை, ஆத்ம பலம், ஞான மரபு  சார்ந்தது என்று அறிவீர்களாக. 

1 comment:

Balaji Srinivasan said...

kandarsashtikavacham proof kappurimai polum :D