Friday, August 19, 2011

கள்ளக்கவிதை

மின்னஞ்சலில் வந்தது:

வெள்ளிக்கிழமை இரவு நடனத்தில்
காதில் கிசுகிசுக்க
கவிதையொன்று
வேண்டும்
நாற்பதே வார்த்தைகளில்.

சொன்னவுடன் காது சூடேறி
முகம் சிவந்து
இருள் மூலை தேட
இறுக்கமான ஜீன்ஸ் எளிதாக தளர

மின் உரையாடலில் மயக்க
அலுவலக ராத்தங்கல்களில் பாட
எளிதாக குறுஞ்செய்தி அனுப்ப


சனிக் கிழமை பிற்பகலில்
நீ யாரென்று கேட்காதிருக்க 

1 comment:

சரவண வடிவேல்.வே said...

ஒவ்வொரு வரியும் அற்புதம் சார்....