Sunday, October 10, 2010

லாலி

தவம் கைகூடி வந்துவிட்டது. கண்கள் ஒளி பெற்றுவிட்டன. மனம் ஆழ்கடலின் அமைதியைப் பெற்றுவிட்டது. இயல்பான ஆற்றொழுக்காய் வார்த்தைகள் வர ஆரம்பித்துவிட்டன. இருப்பிற்கான ஆதாரம் உறுதியாகிவிட்டது.

லாலி லல்லியின் மரூஉ
லல்லி லலிதாவின் கொச்சை
லலிதா மிருதுவான பெண்
விளையாட்டில் ஈடுபட்டிருப்பவள்
லாலி பெண்ணுமல்ல மிருதுவுமல்ல விளையாட்டுமல்ல

லாலி என்றால் நழுவுதல்
கவிதை நழுவுதலின் கலை

மரபின் கண்ணிகள்
தொடர்பின் கண்ணிகள்
நினைவின் கண்ணிகள்
நழுவிக்கொண்டேயிருக்கின்றன

லாலியில் கோவை கட்டுதல்
அர்த்த கோவை ஆகாது

லாலி லாலிதான்

இப்படியாக உறுதியாகும் ஆதாரம்
எதுக்காகும்?

லாலிலோலாலி லாலிலோலாலி

No comments: