Friday, October 22, 2010

ரே! சகீ

தெரிந்ததை எழுதவில்லை
அறிந்ததை பறைசாற்றவில்லை

எழுதி எழுதியே
அறிய விரும்புகிறேன்
என் புலனுக்கெட்டா
அக உணர்வுகளை

அவை ஏற்கனவே தெரிந்தது போலில்லை
கச்சிதமும் நேர்த்தியும் கூட இல்லை

ஆகச் சிறந்த எளிமையைத் தேடியே
வேண்டுமென்றே
உதிர்க்கிறேன்
அனைத்தையும்

ஏமாந்தாலும் சரிதான்
வேண்டுமென்றேதான்
வேண்டுமென்றே
வேண்டும்
சித்திரமாய்
நீ
என்னுள்ளே

No comments: