Wednesday, October 6, 2010

நான் திரும்பக் கிடைத்தது

நான் காணாமல் போவதும்
திரும்பக் கிடைப்பதும்
வாடிக்கையாகிவிட்ட
என் கவிதையில்

நான் திரும்பக் கிடைக்கும்போதெல்லாம்
விட்டுச் சென்ற
உருவகங்கள்
படிமங்கள்
நானில்லையே
என்று பேதலிக்கின்றன

சிறு சிறு உணர்வுகளின்
சிறு சிறு விழுமியங்களில்
கவிதைக்கு அப்பால்
அப்பாலுக்கும் அப்பால்
போன நான்களுக்கும்
வந்த நான்களுக்கும் அப்பால்

உன் நினைவில்
என்றேனும்
நல்லூழின் சிறு மலராய்
நான்
மொக்கவிழ்ந்தால்
நிச்சயம் கொள்
கிடைத்தது
நான்தானென

1 comment:

Rhoda Alex said...

lovely... never ever could imagine in class that you would pen prolific romantic poems of intensity and depth.