Thursday, September 22, 2011

பலி

இனி என்ன செய்வதென்று தெரியவில்லை


காபிக் கோப்பைகளுடன் மௌனமாகக் கழித்தாயிற்று
விஸ்கி புட்டிகளும் தீர்ந்துவிட்டன
ஜன்னலுக்கு வெளியே எவ்வளவு நேரம்தான்
பார்த்துக்கொண்டிருப்பது

மீண்டும் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேருகிறோம்.

திரும்ப எல்லாவற்றையும் முதலிலிருந்து சொல்கிறோம்


தூரத்தில் உடுக்கடித்து குலக்கதை பாடுகிறார்கள்
இந்நேரம் கொடை பலிகள் முடிந்திருக்கும்
குடல் உருவி குருதி குடித்து
பொங்கலிட்டிருப்பார்கள்


வேறெங்கோ செல்லவேண்டுமென்று முடிவாகிறது
எங்கேயென்று நிச்சயம் தெரியவில்லை

aporia பன்னிரெண்டு வகை என்று யாரோ முணுமுணுக்கிறார்கள்

அறியப்படாத நிலத்தில் குருதி தொடல்
புனிதமில்லையாம்

No comments: