Friday, November 11, 2011

தன் நிழலை சுமந்து திரிபவன்


கர்நாடகத்து தோல் பாவை 'கும்பகர்ணணை எழுப்புதல்'




1
தன் நிழலை சுமந்து திரிபவன்
உண்மையில் உறங்கும்
கும்பகர்ணன்

2
உண்மை உறங்கும்
தன் நிழலை
சுமந்து திரிபவன்
அறிவதில்லை
தன் நிழல்
கூத்தாடும்
என

3
கூத்தாடும் தன் நிழல்
தன்னுடல் பொத்தலினால்
விரியும் குறுகும்
என்றறிந்தாலும்
பாய்ச்சும் ஒளி
மேலும் வேண்டி
தூங்கிக்கிடப்பான்
கும்பகர்ணண்

4
முந்நூறு ராமாயணங்கள்
சொன்னாலும் சரி
ஆயிரம் ராமராஜ்யங்கள்
கற்பித்தாலும் சரி
அரசுக் கட்டிலில்
எப்போதுமே
கும்பகர்ணன்

5
ஓகோ
ஆகா
ம்ஹ்ம்
என்று
குறட்டை
விடுவான்
கும்பகர்ணண்





 ----------------------------------------------------------------------------------------------------------------------
(மேலும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும். மீண்டும் மீண்டும் இங்கே வருகை தரவும்)



No comments: