Friday, November 11, 2011

வீரகாவியம்

கர்நாடகத்து தோல்பாவை 'சோளக் காடு'




வீரகாவியம் பாட
ஏதுமில்லை
இன்றெனக்கு


சோளக்கொல்லையை
உப்பிட்டு தீயில் வாட்டி
தட்டிலெடுத்து
திரும்பி நிற்க
தட்டிப்பறித்து
வெளிப்பறந்த
காக்கை விரட்டிய
சாகசம் தவிர
ஏதுமில்லை
இன்றெனக்கு


வான்கோவின்
காக்கை பறந்த
சோளக்காடு
நினைவில் தட்ட
முட்டி மோதி
உள் நுழைந்தால்
காக்கை இல்லை
அங்கேயும்
எந்தனுக்கு


தரையில் கிடந்த
ஒற்றைப் பச்சை
சோள மணி
வான்கோ நினைவில்
தீக்குத் தப்பி
காக்கைக்குத் தப்பி
எனக்குத் தப்பி
கிடுகிடுவென
முளைவிட்டு
வேர்விட்டு
வளர்ந்து
விரிந்து
கண் முன்னே
மஞ்சள்
வனமாயிற்று
உந்தனக்கு


வீரகாவியம் பாட
வேறொன்றுமில்லை
இன்றெனக்கு




No comments: