Wednesday, November 23, 2011

என்னை உற்று உற்றுப் பார்க்காதே



உடலில் பச்சை குத்துவதற்கான வடிவம்



என்னை 
உற்று உற்றுப் 
பார்க்காதே

ஏன் உடைந்தாயெனெ
மீண்டும் மீண்டும் 
கேட்காதே

உன் பெயர் இதுதானேயென
சொல்லி சொல்லி
சிரிக்காதே

நீ இன்னும் உயிருடனா என 
கிள்ளிக் கிள்ளி
சோதிக்காதே

நீ எப்படி இப்படியென
மலங்க மலங்க
விழிக்காதே

உன் ரகசியம் நானறிவேன் என
சிணுங்கி சிணுங்கி
நிற்காதே

நம்
ஒரு பிடி சாம்பல்
கரைக்க சீறி வருகின்றன
பேரலைகள்

No comments: