Monday, November 28, 2011

நான், நீ, அதே






கடல் கன்னி கூறியது:

வையகமே
கண்ணாடியென்றால்
திரவ வானம் ஊசலாடுவது
ஒரு கடல்

திவலைகள் ஆகும்
கடற்கரைகளோ கோடி

நான், நீ, அதே
ஆழ்கடல் அதிசயங்களின்
நீல மர்மங்களின் 
இலவசங்கள்
எனினும்
மாயச் சுழல் சிக்கி
ஏதேனும் ஒரு
கரையேறிய பின்
வார்த்தைகளேயிருப்பதில்லை
நம் கதை சொல்ல




No comments: