Wednesday, November 2, 2011

நீருலகு




கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்





ஒரு கண் பார்ப்பதை மறு கண் பார்ப்பதில்லை மீன்களுக்கு
முகத்தோடு முகம் பார்த்து நிற்பதில்லை அவை
மற்றதன் முகம் நோக்கி நீந்துவதுமில்லை
முத்தத்தின் நிர்ப்பந்தமுமில்லை 
முற்றிய பகையில் முகம் திருப்புவதுமில்லை
ஒன்றன் வால் பிடித்து மற்றொன்று
ஒன்றன் முதுகில் மற்றொன்று 
கூட்டம் கூட்டமாய் 
ஒரே திசையில் துடுப்பசைத்துச் செல்கின்றன
ஒரு நொடி
ஒரு துடுப்பு
கனவெனவே 
விரிகிறது
கடலாழம்

1 comment:

Anonymous said...

நல்ல கவிதை.
பல முறை திரும்ப வாசித்தேன்.

கார்திக்