Saturday, November 19, 2011

புறாக்கூடு





சிபி சக்கரவர்த்தி கதை/அஜந்தா குகை ஓவியம்



மேஜையில் கத்தி
குழாயில் நிற்காத நீர்ச் சொட்டு

உறைந்த பனியில்
கெடாத மாமிசம்

கழுவிய பாத்திரங்களில்
நிரந்தரக் கறை

விழுந்த கோப்பையில்
மீந்த மதுத்துளி

நிறைந்தே இருக்கிறது
குப்பைக் கூடை

சுவர் அடைக்கும்
மான் தலைக்கொம்பு

கண்ணாடித் தொட்டியில்
தூங்கா மீன்கள்

புறா கட்டும்
புதுக் கூடு



No comments: