Wednesday, September 8, 2010

நாய்களுக்கோர் நற்சான்றிதழ்

தெரியாமல்தான் கேட்கிறேன்
நீங்கள் விஸ்கியோடு தனியாய் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தபோது உங்களோடு துணையாய் இருந்தது யார்?
நீங்கள் வாலை ஒட்ட நறுக்கி எறிந்த பிறகும் உங்கள் காலையே சுற்றி வருவது யார்?
தினமும் நீங்கள் வீட்டுக்குத் திரும்பும்போது ஏதோ பல காலம் பிரிந்த தோழி போல உங்களைக் கொஞ்சி கூத்தாடுவது யார்?
தருமர் பின்னால் சென்றது போல உங்கள் பின்னால் வரப்போவது யார்?

இருந்தும்
நாய்களுக்கான நற்சான்றிதழ் கவிதை உலகம் பூராவும் இல்லவே இல்லையாம்

தெருவில் ஏதோ இசகு பிசகாய் காரியங்கள் செய்து உங்கள் வாழ்க்கையை உருவகப்படுத்தினால் அதற்காக இப்படியா?

No comments: