Wednesday, September 15, 2010

கிளி வளர்ப்பு

அதைக் கூண்டிலடைத்ததிலிருந்து
அவள் கணவனின் குரலில்
இறைஞ்சுகிறது

மிளகாய்ப்பழம் தர மறுத்தபோது
அவளுடைய காதலனின் குரலில்
அவ்வபோது
கூப்பிடுகிறது

சிறிய சிணுக்குரி ஒன்றினால்
பட்டென்று அதன் தலையில் போட்டபோது
அவள் அம்மாவெனவே முனகியது

எல்லோரும் கிளியாகிவிட்டனர் என்ற
பிரமையிலிருந்தவளுக்கு
கூண்டைத் திறந்துவிட்டால்
தன் சுய குரலில் அது பேசுமென
அவளுக்குத் தெரிந்துதானிருந்தது.

1 comment:

sinthikkama siringa said...

nandri kili josiyakkararukku

Ragam" Ramesh kumar