Saturday, September 11, 2010

யார் யாரோ

யார் யாரோ எவெர் எவெரோ
அங்கெங்ஙின்னாதபடி
நண்பர்களுமாகின்றனர்
உற்றமும் சுற்றமுமாகின்றனர்
பகைவர்களுமாகின்றனர்
கணத்தின் விதிக்கேற்ப
கூடி அவிழும்
வண்ணக்கோலங்களென

யார் யாரோ
ஆளற்ற கரையிலும்
கடல் அமைதிகொள்ளாது
ஆர்ப்பரிக்கவே செய்யும் என்று
அறிந்தே வைத்திருக்கிறார்கள்

ஆதலினால்
கூடி முயங்க
எவர் எவரோ என்றாகிலும் சரி.

No comments: