Thursday, September 30, 2010

கவிழ்தும்பை

எவ்வளவு நேரம்தான் என்னையே
பார்த்துக்கொண்டிருப்பாய்
என்றது வெட்கத்தில்
தலை கவிழ்ந்த
ஒற்றைத்
தும்பைப்பூ

சின்னஞ்சிறிய அளவில்
எதிரெதிர்
அடுக்கிய இலைகள் தாண்டி
வெண்மையாய் பிரகாசிக்க
என்ன தவம் செய்தையோ நீ

உன்னை மார்பில் ஏந்தி
வெற்றி வேண்டி
சமாதானம் பேச
வருவாயோ என் கண்ணே
உலகோடு எனக்கில்லை சமர்
என்று கொஞ்ச

யுத்த மரபின் கனம் விலக
ஓற்றைத்தும்பை
பல்கிப் பெருகி
மார்பனைத்தும் மாலையாய்
நிறைக்க
கொஞ்சலின் உந்தல்
அதி வேகமாக
திகட்டத்திகட்டக்
கொஞ்ச
நிலவெளியெங்கும்
நிறைத்தது
பூக்களாலான
வெண்கடல்

No comments: