Thursday, September 16, 2010

வனச் சுனை

அடர்ந்த காட்டின் மத்தியில் உள்ள
அந்த வனச் சுனை
பற்றிய கதைகள் ஏராளம்.

ஸ்படிகக் கண்ணாடி போன்ற
அதன் மேற்பரப்பில் தன் முகம் பார்த்தவர்கள்
தன்னை அறிந்தவர்கள் ஆவார்களாம்

அதிலிருந்து நீர் அருந்தியவர்களோ
நினைத்தது சித்திக்கப் பெறுவராம்

அதில் குளித்தவர்களோ
மூவுலகையும் ஆள்வார்களாம்

வெறுமை என்றால் என்ன
என்று தெரிந்தவர்களுக்கு
அந்த வனமும் சுனையும்
எங்குமிருக்கிறதாம்

No comments: