Sunday, September 19, 2010

அம்மை

அம்மைக்கு பருத்த முலைகள் ஏராளம்
கைகளோ பல்லாயிரம்கோடி
காம்பிற்கு ஒரு பால்
கைக்கொரு அபயம்

நீண்ட கழுத்தின் மேல்
கூம்பியிருந்த முகத்திற்கு
ஒற்றைக் கண்ணே
வாயிலாக
இக்காலம்
முக்காலம்
எக்காலமும்
ஆங்கே குவிவதாக

அம்மையை கனவு நதி தீரத்திலே
காணவியலும்
என்பதாக

ஆதிவாசி கதையில் வாழும் அம்மை
காலம் தப்பியேனும்
பேதமற்று அணைக்கும்
பேருவுவகையை
நகர் வழி ஏகி
நல்குவாளென

No comments: