Monday, September 13, 2010

கொசுவம்

தடுப்புக்கு மேலிருந்த கண்ணாடி
வழி போவோர் வருவோரின்
இடுப்பு மட்டும் தெரிந்தது

சேலையின் கொசுவத்தை
செருகியிருந்த விதத்தில்
பளீரிட்ட மாநிற இடை
அவள்தான் அவள்தான்
என அறுதியிட
பதறி எழுந்து
ஓடிச் சென்று பார்த்தான்

கொசுவம் மட்டுமே அவளாயிருக்க
வேறொருத்தி நின்றிருக்க
தன் நினைவின் துல்லியம்
தப்பியதாய் மனம் கற்பிதங் கொள்ள

புனிதமும் தொலைந்தது என்பதாகவே

No comments: