Sunday, September 12, 2010

ஊஞ்சல்

கிராமத்தில் ஆடிய ஊஞ்சலை
நகரத்திற்கு கொண்டுவர முடிவதில்லை
எமக்கனம் கனக்கிறது என்கிறார்கள்
தலை வாசலில் நுழைவதில்லையென அலுக்கிறார்கள்
மர உத்திரமில்லா வீடுகளில் கூரையைப் பிய்த்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்
அறுத்து விறகாக்கலாம் வீணையுமாக்கலாம்
பழம்பொருள் அங்காடியில் கூவிக்கூவி விற்கலாம்
மரவிலைக்குக் கொடுக்கலாம்
என்ன என்னவோ எது எதுவோ
செய்யலாமென்றிருக்கிறார்கள்
வீசி ஆடியபோது உச்ச முனைகளில்
உணர்ந்த பரவசத்தை
மறந்தவர்களாய்

No comments: