Sunday, September 12, 2010

பிம்பங்களைப் புணரும் சமகாலத்தியர்க்கு

பிம்பங்களை மனத்தால் புணர்ந்து
பழகிவிட்ட சமகாலத்தியர்க்கு சில வேண்டுகோள்கள்

ஆரத் தழுவி பல முத்தமிட்டு பல முத்தமிட்டு
உதடுகளைக் கவ்வி
ஆழமாய் பதிந்து
நாக்கினால் நா துழாவி இருக்கையில்
பிம்பத்தை ஒத்ததா இதுவென
ஓரக் கண்ணால் பார்க்காதீர்கள்


உடலசைவுகள், பாவனைகள்
வருடல்கள், இறுக்கங்கள்
தளர்வுகள், பெருமூச்சுக்கள்
ஏற்கனவே அறிமுகமாவென
சோதிக்காதீர்கள்

படுக்கையறைகளில் பிற பெயர்களைச்
சொல்லி கூவுதல் இப்போதெல்லாம்
சகஜமெனினும்
கூட்டம் கூட்டமாய்
ஆணுடல் பிம்பங்களும்
பெண்ணுடல் பிம்பங்களும்
உறவின் போதும்
காட்சிப் பெட்டிகளில்
ஆட வேண்டுமென
ஏங்காதீர்கள்

பிம்பங்களற்றும் நகரும் வாழ்வு

No comments: